வார்த்தைகளுக்கு
வண்ணம் பூசி
பழக்கமில்லை .
கடலலையாய்
உள்ளம் அலைபாய்கிறது .
என் உறக்கத்தை
உன்நினைவு
கடன்வாங்கிக்
கப்பலை செலுத்துகிறது .
துடுப்பிழந்த
ஓடமாய் ...
ஓய்ந்துபோக இயலாது
வெடித்துக் கதறுகிறேன் .
நீலவானம்
முடியும்வரைத்
தேடுகிறேன்
உன்னினைவுச்
சங்கிலியோடு .
திமிங்கிலங்கள்
அசைபோடுமுன்
அன்பனே - உன்
முரட்டுக் கரம் தா .