இராஜஇராஜேஸ்வரி அவர்கள் வழங்கிய விருது

இராஜஇராஜேஸ்வரி  அவர்கள்  வழங்கிய  விருது

Thursday 19 July 2012

உன் முரட்டுக் கரம் தா



வார்த்தைகளுக்கு
வண்ணம் பூசி
பழக்கமில்லை .

கடலலையாய்
உள்ளம்  அலைபாய்கிறது .

என் உறக்கத்தை
உன்நினைவு
கடன்வாங்கிக்
கப்பலை செலுத்துகிறது .

துடுப்பிழந்த
ஓடமாய் ...
ஓய்ந்துபோக  இயலாது
வெடித்துக்  கதறுகிறேன் .

நீலவானம்
முடியும்வரைத்
தேடுகிறேன்
உன்னினைவுச்
சங்கிலியோடு .

திமிங்கிலங்கள்
அசைபோடுமுன்
அன்பனே - உன்
முரட்டுக்  கரம்  தா .




Friday 6 July 2012

மறத்தின் துணைக் கொண்டு அறத்தை வென்றெடுக்க

காகிதபூ அணிவதில்லை நீ
என்றாய் .

காரல் மார்க்ஸ் சே
வியத்தகு  தலைவர்என்றாய்.

சாதிகள்  அழிய
வேண்டுமெண்றாய் .

சமத்துவாம்
நிலைக்க வேண்டுமென்றாய்.

உலக சண்டைகள்
ஓய வேண்டுமென்றாய்.

அதற்க்கு ...
மறத்தின் துணைக் கொண்டு
அறத்தை வென்றெடுக்க
வேண்டு மென்கிறாய்.