இராஜஇராஜேஸ்வரி அவர்கள் வழங்கிய விருது

இராஜஇராஜேஸ்வரி  அவர்கள்  வழங்கிய  விருது

Sunday 19 August 2012

தமிழனே இப்படித்தானோ



கடவுள்  மறுப்பை
கட்டுமிரண்டித்தனாமாய் ...
அறிவியலை  புரிந்து கொள்ளாத
கண்மூடித்தனத்தோடு .

எப்போது புரிந்து கொள்வாய்
தமிழனே .
கடவுள் மறுப்பு என்பது
எப்படி...  ஏன்...
என அறிவியல்
நுட்பத்தோடு ...
நீ ...
மறுத்தளிக்க
வேண்டும்  கடவுள்
இல்லை கடவுள் இல்லை
இல்லவே  இல்லை
என்பது எப்படி
அறிவும்  அறிவியலும் ஆகும் ?

பெரியார்  ஒருவர்
போதுமே
தமிழனை
இழிவு  படுத்தியதும்
முடமாக்கியதும் .

பழமை
அறிவியாலை  உள்ளடக்கியது
யோகமும்
சாங்கியமும்
உலகாயதமும்
உள்ளடங்கியதுதான்
வள்ளுவரின்  திருக்குறள் .
எவனாவது  மறுதலிக்க இயலுமா ?

கடவுள்  எப்படி
எதற்காக படைக்கப்
பட்டர்  என்பதை
அறிவியல்  நுட்பத்தோடு
புரிய  வைக்க வேண்டாவா ?

சடங்குகளும்
சில  அறிவியல் நுட்பம் வாய்ந்தவை
இதை  புரிந்து
கொள்ளவில்லை
என்றால்  எதையும்
முழுமையாக
புரிந்து கொள்ள இயலாதே .

காட்டு  மிராண்டியாய் 
இருந்து விடாதே
விழி ...
ஏழு ...
பார் ...
உலகை  நோக்கு
வெற்றியை  கைது  செய் .

அறிவியல் சில சமயம்
ஆன்மீகமாக
தோற்றம் கொண்டு
இருக்கும்
அறிவைதிரட்டி
புரிந்து கொள்ள முயல்
காட்டுமிராண்டியாக
மறுதலித்து
முடங்கிப் போகாதே .

அறிவியலை
ஆன்மீகமென  எண்ணி
கோட்டை விட்டு விடுவோம் .

சான்றைத்  தேடி
அறிவியலை  பரப்புரை
செய் .

சிந்திப்பாய்
தமிழனே .




Monday 6 August 2012

சாவைத்தழுவா விடியலைத்தேடுகிறேன்



எந்த மை கொண்டு
எழுதப்  பட்டதென
புரியவில்லை
அழிய மறுக்கிறது
இதயதிலுன் பெயர் .

கண் மூடித்தனங்கலோடில்லை
கட்டுப் பாடுகளுடன்
சிந்தித்தேன் ...
வளம்  கொழிக்காவிட்டாலும்
கேடுகள்
நிகழ  வாய்ப்பே
இல்லை .
நமக்கான சிறகுவிரித்தலில் .

உனதான
பாதைகள்  என்
வாழ்க்கைக்கு
வலு  சேர்க்கிறது .

சிதறிக்  கிடக்கும்
உன் சிந்தனைக்  களம்
என்னுள் சிலிர்ப்பைத்தருகிறது .

உனதான
வாழ்வியல்
விளக்கங்கள்
என்னை
வசீகரிக்கிறது .

எதிர்  நீச்சல்
அல்ல...
இலக்கணமாய்
உன் பதிவுகள் .

உன் ...
சகாப்த்தத்தில்
நானும் சாவைத்தழுவா
விடியலைத்  தேடுகிறேன் .

                 -  தமிழன்புடன்  மாலதி