உன் ...
நினைவுகள்
என்னைத்தாக்கும்
போதெல்லாம்
கோடைமழைஎன
கொட்டித்தீர்க்கிறது
கண்கள் .
ஆண்மை மீறாத ஆண்மை
அமைதி
வியக்கவைக்கும்
பொறுமை எதற்கும்
கலங்காத நெஞ்சம் .
இந்த ...
சமூகத்தைப்பற்றிய
சரியான புரிதல் .
வறுமை உன்னை
ஆட்டங்கான
வைக்க நேர்ந்தபோது
ஆண்மைதவறாமல்
காத்தமை .
உன் ...
இலையுதிர்காலத்து
நாட் குறிப்பேட்டை (டைரி )
காணநேர்ந்தபோது
வாய்விட்டே
கதறி அழுதே அல்லாவா
போனேன் .
எப்படி ...
எப்படி ....
உன்னிதயத்தை
இரும்பாக்கிக்கொண்டு
அத்தனையும்
பதிவு செய்தாய் .
இன்முகம்
காட்டி எப்படி
எல்லோரிடமும்
பேசுகிறாய் அன்பனே? இன்றைய சூழலில் காதல் வெறுமனே உடலை கண்டு காதல் என கற்பிதம் செய்துகொள்ளுகிறது. காதல் உடல் அல்ல உள்ளம் சார்ந்தது என்பதையும் காதல் பற்றிய முழுமையான புரிதலை உண்டக்கவுமே இந்த ஆக்கங்கள் எழுத்து பிழை இருப்பின் சுட்டிகாட்டும் அன்பர்களுக்கு எமது உளம் கனிந்த பாராட்டுகள் சொற்பிழை இருப்பின் சுட்டிகாட்டுக என்றும் நன்றியுடன் மாலதி .