இராஜஇராஜேஸ்வரி அவர்கள் வழங்கிய விருது

இராஜஇராஜேஸ்வரி  அவர்கள்  வழங்கிய  விருது

Sunday 14 July 2013

பித்தம் தெளிந்தேன் ....



      வணக்கம் . போராட்டம்தான்  ஒருமனிதனை  செழுமைப்படுத்துகிறது .அல்லது அவனை குப்புறத்  தள்ளி கேவலப்படுத்துகிறது . என்பதான  எனது எண்ணம்  உண்மையாகிப் போனது . சறுக்குமரத்தில் முறையில்லாமல்  ஏறி  வழிதெரியாமல்  விழுந்து  கிடந்தேன் எந்த புரட்ச்சி யாளர்களும்  என்னைக் காக்க  வரவேயில்லை .      இந்த சமூகம் சுயநலம் உள்ளது அதில்  முதலில்  தன்னை மட்டுமே  உயர்த்திக் கொள்ள  வேண்டும்  கடினமாக உண்மையாக  உழைக்க வேண்டும்

       பொருள்  தேடவேண்டும் . அருள் இல்லாதவர்களுக்கு மேலுலகத்தில் இடமில்லை பொருள்  இல்லாதவர்க்கு இந்த உலகத்தில் இடமில்லை என்பதை சற்று காலம்  கடந்து  உணர்ந்து கொண்டேன் .    கொள்கைகள் கோட்பாடுகள்  எதுவுமே  எனது எனது சோகத்தையும்  துன்பத்தையும்  தீர்க்க வரவேயில்லை . எந்த ஆபத்தாண்டவனும் என்னை தூக்கி நிறுத்த வரவேயில்லை . வழமைபோல  நானே  விழுந்தேன்  நானே எழ முயல் கிறேன் . இந்த போராட்டத்தில்  கோழைகள்  எடுக்கும் கீழான முடிவு கூட எடுக்கத் துணிந்தேன்  அனால் தற்கொலை செய்துகொள்ளவில்லை செய்து கொள்ளவும் மாட்டேன் அனால்  எனது முந்தய முடிவில் எந்த  மாற்றமும் இல்லை . என்னமுடிவு என்பதுதானே உங்கள் வினா? காலம் வரட்டும் நானே சொல்லுகிறேன்.

       காதலில், அல்லது துன்பத்தில்  துடிப்பவர்கள்  ஒன்றை முழுமையாக  அறிந்து கொள்ள வேண்டும்  அதாவது  உலகத்தோடு  ஓட்ட ஒழுகல்  என்பது வள்ளுவம்  இந்தபெரும்பான்மை  உலகம் எங்கு ஓடுகிறதோ  அங்கே  நாமும் ஓடவேண்டும் . தனித்து நின்றால்  பித்து பிடித்தவன் ஆகிப்போவோம்  எந்த  துன்பத்திற்கும் காரணம்  என்ன என்பதை அறிந்து கொள்ள வேண்டும்  நேற்று என்பது உடைந்துபோன பானை ... நாளை என்பது மதில் மேல் உள்ள பூனை ... இன்று என்பது  கையில் உள்ள வீணை ... ஆம் நேற்றைய  நிகழ்வை  அசைபோட்டால்  இன்றும் நாளையும் நமது வாழ்வில் காணமல் போய்விடும்  நாளைய தினத்தை  எண்ணி கவலைப்பட்டால்  இன்றைய  கையில் உள்ள வீணையின்  நாதம் நமக்கு மகிழ்வைத்தராது  நாம் செய்ய வேண்டியது எல்லாம் ஒன்றே  கடந்த காலங்களையும்  எதிர்கலாத்தையும்  சிந்திப்பதால்  ஒன்றும்  போவது இல்லை.       இன்றைய நாளை முறையாக திட்டமிட்டு  செலவிட்டால்  எதிர்காலம்  நமக்கு ஒளிமிக்கதாக மாறிப்போகும் . என்பது எனக்கு சற்று காலம் கடந்து புரிய வந்தது . இன்றைய  நாளில் ஆன்மீகத்தை உள்ளடக்கிய  தேர்ந்த ஆசான்கள் இளைஞ்சர்களுக்கு  தேவையாக  இருக்கிறது .
அடுத்த பதிவில்  பேசுவேன் ....


அன்புடன்  மாலதி .

Saturday 15 June 2013

திட்டம்கொண்டு போராடு - காதல் கடிதம்போட்டி .



எனது அரக்கு
மாளிகைகள் 
எரிக்கப் பட்ட பின்னரும்....
நான்  கற்ப்பூரங்களை
தோடிக்கொண்டு  இருக்கிறேன்
விளக்கேற்றிக் கொள்ள  அல்ல
வீடுகட்டிக்  கொள்ள .தேவையாக இருக்கிறது

     எல்லாக் கதவுகளும்   அடைக்கப்  பட்ட பின்னரும் நான்  எனக்கான  பாதையை தெரிவு  செய்து விட்டேன்  எதையும்  ஏற்றுப் பழகுவது .... இந்த உலகில்  எது நிரந்தரம்  எது தற்காலிகம் ?

எல்லாமே பிழைபட  கற்றுக் கொண்டால்  பாதைகள் கடினமாகத் தோன்றும்  மிகச் சரியானதை புரிந்து கொள்ளாவிட்டாலும்  பாதைகள் கடினாமாகும் . இந்த  கடிதம் வரையும்  எல்லா நொடிகளும்  நான் மிகவும் தெளிகவகவே  இருக்கிறேன் .
   ஒரு இனிய வாழ்க்கை முறை எப்படி இருக்கவேண்டும்  என பல ஆண்டுகளாக  செதுக்கிச் செதுக்கிச்  செய்து வைத்து இருந்தேன்  அந்த இனிய வாழ்வு  கிடைத்து விட்டதாய் . உள்ளூர  அகமகிழ்ந்தேன்  எல்லாமே கனவுபோல நடந்தேறிவிட்டது . எது  நடக்கக்  கூடாதோ  அது  நடந்தேறி விட்டது  சராசரிபோல  பிரிவின் துயரில்  மூழ்கிக்  கிடந்தேன் .
   நமக்கான கற்ப்பிதங்கள்  நம்மைப் போலவே  முரண்பட்டே கிடக்கிறது . மூளியாக.... வாழ்க்கையும் புரிதல்களும்  நான் சொல்லுவதே  சரி  நீ எண்ணுவதே  மிகவும் சரி  என்பது எல்லாமே  இங்கு  பிழையானவைகள் இங்கு எல்லோரும் எல்லாவற்றையும்  கற்றுக் கொண்டு வருவதில்லை  கற்றுக்  கொடுப்பதும் இல்லை .
உனதான  தொடர்புகள்
எல்லாதிசைகளிலும்
அடைத்து  மூடப் பட்டன
ஆனாலும் .....
என் நம்பிக்கை
துளிர்விடும்  என்ற
ஆசையில் ....  வாழுகிறேன் .
காதலாம்  காதல்  எல்லாமே இனக் கவர்ச்சி ... தேவைகள் தீர்ந்து போனால் ஆசைகள் அருகிப் போகும்  என  வரட்டுத் தத்துவ வாதிகள்  கூறலாம் . கூர்மழுங்கிய  வார்த்தைகளினால் .அனால்  எனக்கான  வாழ்க்கைப்  பாதை  எனதான திட்டமிடலுன்  உன்னதமான  நம்பிக்கையுடன்  வடிவமைக்கப் பட்டவைகள் .
நிகழ்காலம் தான் உண்மை கடந்த காலமும்  எதிர்கலாமும் நமது கட்டுப் பாட்டில் இல்லை  எனலாம்  நிகழ்காலம்  நமதானால்  எல்லாக் காலங்களும்  நமக்கானதே .
ஏமார்ந்தோம் ....
ஏமாற்றப் பட்டோம் ...
என் நம்பிக்கைகள் வெட்டிச்
சாய்க்கப் பட்டுவிட்டன
துன்பக்  கடலில்
துடிக்கிறேன் ...    என்பதெல்லாம்  முட்டாள் தனம் நிறைந்த சொல் விளையாட்டுக்கள்.
      நாம்  நாமாக இருக்கும் போது  நாம் என்றுமே  அழத்  தேவையில்லை .
இப்போது  என்னதேவை ...
என்ன இருக்கிறது ...
எப்படி பயன்படுத்தி
மகிழ்வடையப் போகிறாய்.
     என்பதே  எனது புதிய  கற்ப்பிதம்  ஆயிரம்  ஆண்டுகள்  கற்றுக் கொள்ளாதது  ஒரு நொடியில்  கற்றுக் கொண்டு விடலாம் . கற்றுக்  கொள்ளவிட்டால்  இங்கு கற்றுக்  கொடுக்க வேண்டியதும்  பெரியதேவையாக இருக்கிறது  அனால் முறையாக  கற்றுக் கொடுக்கத்தான்  . இங்கு ஆளில்லையோ  என எண்ணத் தோன்றுகிறது .
    ஒரு சிறிய பிழை நேர்ந்து விட்டால்  அதை எவ்வளவு  அழகாக திருத்திக் கொள்ள வேண்டும் .ஒற்றை வார்த்தை பிழை செய்துவிட்டேன்  திருத்திக் கொள்ளுகிறேன்  மீண்டும் பிழை நேராது  இது எவ்வளவு  மனிதனை மா மனிதனாக  மாற்றும் உயரிய வார்த்தை  இந்த  வார்த்தையை  நாம் கையாளாத போது  காயங்கள் பெரிதாகும்  என்ன செய்யப் போகிறோம்.?
   கற்றுக் கொடுப்பவர்மேல்  நம்பிக்கை இழந்து போனால்  கற்றுக் கொள்ள  தேவையிருக்காது  சற்று கீழிறங்கி  நான் இதை செய்து இருக்கவேண்டும்  இதை செய்து விட்டேன் பிழை என்னுடையதுதான்  பொறுத்தருளுங்கள்  இந்த  வார்த்தைகளை  நான்  பயன் படுத்தவே இல்லை . பயன் படுத்தி இருந்தால்  நான் மா மனிதனாக  உயர்ந்து இருப்பேன்
     வாழ்க்கை  சட்டையல்ல  மாற்றிக் கொள்ளுவதற்கு காலங்கடந்து நிற்க வேண்டியது  பொறுமையுடன்  காத்திருக்க வேண்டியதும்  பொறுமையாக  நடக்க வேண்டியது இங்கு தேவையாக இருக்கிறது  நான்  அதையும் சொல்லவில்லை . செய்து காட்டவும்  இல்லை .
     பிழை முதலில்  என்னில் இருந்தே தொடங்குகிறது  இல்லையேல் இங்கு தவறு நேர்ந்து இருக்காது .பிழை செய்துவிட்டேன் பொறுத்துக்கொள்  என வேண்டிய பிறகும்  மன்னிக்கவில்லை என்றால்  ...
     தெரிந்தே  வேண்டுமென்றே  தவறு செய்யவில்லை எதோ ஒருவிதமான  பிழையான புரிதல்  இந்த்த சமூகம் கொடுத்த  அறிவின் மிச்ச சொச்சம் என்னை பாதித்துத்  தொலைத்து விட்டது . என்னுடைய இப்போதைய  நிலையை எண்ணிப் பார்த்து இருக்கலாம்  இதை அழகா கட்டிக் கட்டி இருக்கலாம்  எனக்கு கற்றுக் கொடுகாதது ....
துக்கமும் சினமும் ...
கண்ணீரும் கையாலதத்தனமும் ...
ஒன்றுதான் .
விபத்து நேர்ந்து போனது
சாலையை அடைத்துக் கொண்டு
இருந்தால் எப்படி ?
அழுகையை விட்டெரிந்து
புதிய   வழித்தடத்தை
செப்பனிடு ...
 செப்பனிட்டு இருக்க வேண்டும்  என்னுடைய அவசர புத்தி  எல்லாவற்றையும் பாழ்படுத்தி அல்லவே செய்துவிட்டது .
     
     நீ  இல்லாத  எனதான  வாழ்க்கை  சுவைக்காது நீ இல்லாத  என் வானம்  உதிக்காது  நீ  காட்டாத  திசை  எனக்கு புரியாது ...
எல்லாமுமாக இருந்த  நீ  இன்று என்னுடன் இல்லையென்றால்  இந்த உடல் உண்ணவும் உறங்கவும்  மறந்துபோகிறது . மனிதம்  மரித்துப் போக துடிக்கிறது.

    உன்னுடலை கரைத்துக் கொண்டு  என்னலனைத்  தாங்கிநின்றாய்.
உரிமையானவ... உன்முகம் காட்டு ... போலித்தனமில்லா  உனதன்பை  இந்த பரவெளியில் வேறெங்கு தேடட்டும் .

    காதலுக்கும்  இல்லறத்திற்கும்  இடைவெளி  நீண்டதாய்  உணரவில்லை நீ காட்டும் பரிவும் பாசமும்  முற்றிலும்  மாறுபட்டவை இதில்  காமமும்  காதலும் உன்னதமாக  உயர்ந்து நிக்கிறது .

  இந்த சமூகம் பற்றிய புரிதல்  மாறுபட்டது  ஆனால் நீ  என்றும்  மாறாத  அன்பை  கொட்டிக்  காட்டுகிறாய் . அந்த பிரதி பலனற்ற  பாச வலையை ...  நேசித்துக் கொண்டிருக்க விரும்புகிறேன் .

                                                                          என்றும் அன்புடன்மாலதி

Monday 27 May 2013

அன்பு  உறவுகளே ,

பணிவான  வணக்கம்  நீங்கள்  என்மேல் கொண்டுள்ள அளவற்ற  மதிப்பிற்கு  தலை வணங்குகிறேன் . இருப்பினும் இன்றைய என்னுடைய தனிப்பட்ட சூழல் . உளநிலை  எல்லாமே எனக்கு எதிராக செயல் படுகிறது .

        ஒரு  தனிமனித சூழலில்  காதலின் பங்களிப்பு என்ன என்ன... பாதிப்பை  உண்டாக்குகிறது  பிரிவு எப்படிபட்டது  அது என்ன உள வாற்றளைதரும்
  என்ன பாதிப்பை  உண்டாக்கும் என்பது பற்றியும்  எனது முன்கதையும்  முடிவான கதையும்  வரும்.....  இதில்  நான் எவரைப் பற்றியும் புண் படும் படி கூறப் போவதில்லை .எனது எல்லா இடுகைகளும்  இந்த சமூகத்திற்காய்  அர்ப்பணிக்கப் பட்டவைகளாகும் . அதே அடிப்படையிலேயே  எனது  பதிவுகள் தொடரும் .....அது எப்போது  அதுதான் புரியவில்லை  ஆனாலும் உங்களை வாசித்துக்  கொண்டே  இருப்பேன் .....

பணிவான வணக்கங்களுடன்
மாலதி. 

Wednesday 22 May 2013

விடைபெறுகிறேன் .....

இனி  வருவேனா  இல்லை வரமாட்டேனா    ஒன்றும்  புரியவில்லை
விடைபெறுகிறேன் . நன்றி  வணக்கம் .....

                உண்மையுள்ள  மாலதி

Saturday 18 May 2013

பிழை.... செய்தேன்

 நீ  ஒரு கோணத்தில்
சிந்தித்து பேசினாய் .

நான் ஒரு கோணத்தில் புரிந்து
கொண்டேன் .
 உன்கோனத்தை
எனக்கு புரிய வைக்கவில்லை.

எல்லாமே  புரிதல் இன்மையால்
வந்த பிழை .

உன்கோணம் உனக்கு சரியென
தோன்றும் .

புரியாமையால்
எனக்கு தவறென படும் .

இதுதான் நமக்குள் காட்சி
பிழையாகிப் போனது .

சரித்திரத்திக்கும்
தரித்திரத்திற்கும்
வேறுபாடு?

பிழை செய்தேன்
மன்னித்துவிடு

சராசரியாக
இருந்தேன்
மாறுபட்டவன்
மாறுபட்டு சிந்தித்தேன்
செய்தமை தவறென
உணர்ந்தேன்
மனித்துவிடு ...

Thursday 25 April 2013

பொறுப்புடன் வாழ்தலும் தான் .

உள்ளமும் உடலமும் 
உயிர்ப்போடு  இருக்கிறதென்றால் 
சூடுபற்றி  உடல் 
இருத்தல்  தேவை.

கண்ணில் கண்டவை 
எல்லாமே ...
உண்மையன்று 
மெல்ல மெல்ல ...
உள்  புகுந்து 
உண்மையரிதல் 
உயர்ந்த  பண்பு.

கண்ணே...
மணியே ...
கற்கண்டே  என்பதன்று 
வாழ்வு .

ஏற்றத்திலும்  இறக்கம் 
காணுகையிலும் 
குத்திக் கட்டாமல் 
கூடி 
வாழ்தல்தான் 
இனிமையன  வாழ்வின் 
தொடக்கமன்றோ .

அறியாமையில் 
உழலும்  மாக்கள் 
கூட்டம்  சிந்திக்க 
வைப்பதுதான் 
சீரிய சிந்தனையாளர்களின் 
உண்மையன வேலை .

உயிர்ப்போடு இருத்தல் 
தன்னலத்தோடு 
இருத்தலுமன்று 
பொது நலந்தாங்கி 
பொறுப்புடன் 
வாழ்தலும்  தான் .

 


Saturday 6 April 2013

என் பாதைக்கு பரிதியாகி வா.

உன்னுடனான
வொவ்வொரு நொடியும்
மறக்க இயலாதவைகள் .
உன் பேச்சுகள்
வொவ்வொன்றும்
மறுதலிக்க இயலாதவைகள்.
நீ காட்டும்பாதைகள்
பழுதற்றவைகள்.

நீ செய்யும்  செய்கைகள்
எல்லாமே ...
மகிழத்தக்கவை.

நீ பொழியும்
அன்பு மாசற்றவை .


நீகாட்டும்
கருணை  கணக்கற்றவை .

காலம் காட்டிய
குன்றிலிட்ட
குலவிளக்கே ...


என்  பாதைக்கு
பரிதியாகி  வா.

என்றும் தமிழன்புடன் ....
மாலதி .

Thursday 21 March 2013

உன்னமுதில் திகட்டி நிற்கிறேன் .

நீ  திறந்து காட்டிய 
உள்ளம் ...
என்னை கட்டிப்போட்டது .

நீ சுட்டிக் காட்டிய

செய்திகள்
என்னை  வட்டமிடுகிறது .

வாட்டம் கொண்ட

நான்  வளைந்து
நிற்கிறேன் .

காய்த்து  குலுங்கும்

கனியமுதாய்
மாற்றிக்  காட்டினாய் .

விண்ணை  முட்ட

உன்னமுதில்
திகட்டி  நிற்கிறேன் .

Tuesday 19 March 2013

தமிழகத்து  தெருக்களில் எல்லாம்
அரசியல் நரிகள் ...
ஊளையிடுகிறது .

காட்டிக்  கொடுத்தவர்
கண்டு கொள்ளாதவர் ...
நீலிக்கண்ணீர்  விட்டு 
நடிப்பு கட்டுகிறவர்கள்
பிணம் தின்னிக் கழுகுகள்
எல்லோரும் வேடமிடுகிரார்கள்

நாடாளுமன்ற  தேர்தல்
வந்து  தொலைக்கிறது
தமிழர்கள்  வாக்கு
பிச்சை  இடவேண்டும் .

ஈழ சிக்கலில்
போதுவாக்கெடுப்பே
சிறந்த  தீர்வு .

தன்னெழுச்சி  மிக்க
மாணவர் போராட்டம்

இனவுணர்வை ...
தட்டி  எழுப்பட்டும் .

மரபுவழிப்பட்ட
தமிழரின்  மறத்தனம்
உலகே அறியட்டும் .

மாணவர் போரட்டத்திக்கு
ஆதரவு  கொடுத்து
பலம் சேர்ப்போம்.

Saturday 23 February 2013

என்னிதயத்தில் உயர்ந்து நிற்கிறாய்.



அன்புகாட்டுவதில்
புதுமை படைக்கின்றாய் .

மொழிபோல
நிலைத்து  நிற்கின்றாய் .

முன்விட்டு  பின்னர்
அறிவை சுவைக்கின்றாய் .

கோ போல என்னிதயத்தில்
உயர்ந்து  நிற்கிறாய்.

வம்சம்  தழைக்க
வழியும்  செய்கின்றாய்.

கொஞ்சம்  தானே
சிரித்துக்  கொள்கின்றாய்.

குறைவிலா
மகிழ்வூட்டுகிறாய் .

நிறைவான இன்பம்
காண தூண்டுகிறாய்.

கண்ணில்  பெரு
ஒளியாய் ...

இதயத்தே
இனிய மகிழ்வாய்....
ஆர்பரிக்கும் ...
அலைகடலாய்.....
இன்முகம் காட்டுகிறாய்.
திக்கு தெரியாமல்
இன்பம் காணுகிறேன் ....
துணையாய் வந்திருக
பற்றிக் கொள் ....


     தற்செயல்தான்  இந்த ஆக்கத்தில்  ஒரு குறிப்புஒன்று  பொதிந்து  உள்ளதை காணுகிறேன் .
கண்டு சொல்லுங்கள்  பரிசொன்றை  வெல்லுங்கள் .

தமிழன்புடன் ....
மாலதி .

Thursday 24 January 2013

இலக்கணத்தைப் படைப்போம் வா.

வீசுகின்ற   தென்றலும் நீ
பேசுகின்ற  மொழியும் நீ
சுவாசிக்கின்ற காற்றும் நீ
கற்கின்ற  பாடம் நீ.

அன்பையே உன்னுள்ளத்தில்
காட்டு  கின்றாய்
அரவணைத்து  தாயையப்போல்
தேற்று  கின்றாய் .

என் கண்ணீருக்கு
விடைக்கொடுக்க  நினைக்கின்றாய்.
காலம் போல்கடமையை
நீ  செய்கின்றாய்.

கள்ள  மில்லா
உள்ளத்தைக்  காட்டுகிறாய்.
கவிஎழுத  ஒரு
மொழியை  வழங்குகிறாய்.

பால் நிலவே 
பருவத்தின் செழிப்பே ....
உன்  விழிஎழுதும்
பா  வினங்கள்கோடி .

நம்  இலக்கே
இலக்கணமாய்  வாழ்வதுதான் .
என்றாலும்  புதிய
இலக்கணத்தைப்  படைப்போம்  வா.