கூட்டுக்குடும்ப வாழ்கை
முறையை முன்னெடுப்போம் .
முற்றாய் இன்றையசிக்கலை
இனங்கண்டு தட்டித்
துரத்துவோம்.
அடிமைமுறைக் கல்விஇது
அதனால் ஆளையேகொல்லுது
ஆசிரியையே வெட்டி சாய்க்குது .
பாழும் பணத்தின்
ஆசையால் ...
பதவிகளின் தாகத்தால் ...
குடும்ப உறவகளே
சுமையாய் மாறுது
பண்பட வேண்டியவனை
பாடாய் படுத்துத்து .
கல்விக்கூடத்தில்
கத்தியை பாய்சுது .
பள்ளிப் படிப்பே
சுமையை தருகுது
சுமையாய் மாறுது.
பதவிகளின் கனவே
இலக்காய் தொடருது .
அன்பை நாளும்
வளர்த்தோமில்லை.
பண்பைச் சொல்லி
பழக்கிநோமில்லை .
பணம்தான் மனிதத்தை
சிதைக்குது ...
அந்த பணமே
மனிதனைக் கொல்லுது .
மனிதமே நீ ...
என்றுதான் மனிதத்தை
சிந்திப்பாய் .
மனிதனாய்
மாறுவாய் ?