இராஜஇராஜேஸ்வரி அவர்கள் வழங்கிய விருது

இராஜஇராஜேஸ்வரி  அவர்கள்  வழங்கிய  விருது

Monday 27 July 2015

மாசற்றவனே உன் மதிமுகம் காட்டு

மாசற்றவனே  உன் மதிமுகம் காட்டு
 
 காலம் செதுக்கிய 
புதுமை  நீ.

கண்போல ...
காப்பவன்  நீ .

 வறுமையிலும் 
அறம்பிழராதவன்  நீ.

அச்சத்தை 
உடைத்தெறிபவன்  நீ.

அடக்குமுறைகளை 
மிதிப்பவன்   நீ

ஆளப்பிறந்தவன் நீ.

அறிவை ஏற்ப்பவன்  நீ.

உழைப்பை 
போற்றுகிறவன் நீ .

மறத்தமிழன் நீ.

மாறக் கோட்பாடுகளை 
உடையவன்  நீ.  

மாசற்றவனே உன் 
மதிமுகம்  கட்டு

Tuesday 14 July 2015

தனிமனித வரலாறு ....

தனிமனித வரலாற்றில்
துரோகங்களைக்
கடந்தே ....
வெற்றி
படிநிலை வளர்ச்சி
அடைந்திருக்கிறது .

இங்கு ....
கொலைகளும் ...
வல்லுறவுகளும் ....
கொள்ளைகளும் ....
ஏமாற்றுதலும் ...
இன்னபிற
குமுகக்  கேடுகளும்
தேசிய  வீர விளையாட்டுகளாகவே ...
பாவிக்கப்  படுகிறது  .

அனால் ...
உண்மை ...
நேர்மை ...
நாட்டின் வளம்...
மொழி ...
பண்பாடு ...
 அடிதட்டுமக்களின்
வாழ்வாதாரம்
இவை எல்லாம்
தீவிரவியம் .
பேசக்கூடதவைகள் .
இவர்கள்
அருவருக்கத்
தக்கவர்கள் .

இப்படிப்
பட்டவர்களைக்
இந்தக் குமுகம்
கையாளும் விதமேதனி ...


பித்தானாக்கி
மலட்டை
மாலையிட வைப்பார்கள் .
கோள்மூட்டி ...
பொறுக்கித்  தனம்
புரிவோரிடம்
மண்டியிடச்  செய்வார்கள் .


பிசாசிடம்  வாழவிட்டு
வேடிக்கைப்  பார்ப்பார்கள் .

 நாசக்கரர்களே .
உங்களின் வாழ்வு
நிலைத்துவிடுமா  என்ன?





Sunday 5 July 2015

இனி நான் உங்களோடு .....


 நீண்ட நாட்களுக்குப்
 பின்னர் உங்களோடு
 காற்றில்  கைகுலுக்குகிறேன் ...

 காலம்  தந்த  சிறப்புப்
 பரிசு  2013 இன் பிற்ப்பகுதியில்
 நடந்தவை  எல்லாமே ...
 என்  நினைவுப்  பெட்டகத்தில்
 இருந்து  காணமல்  போய்விட்டது ....
  கூடா நட்பு  கேடாய்  முடியும்
 முடியும்  என்பார்கள் ....
 அப்படியே  ஆனது ...

 என்னுள் நடந்தவை
 என்னோடு போகட்டும் ...
 இனி  நான்  உங்களோடு
 வருகிறேன் .