உண்மை எப்போதுமே எளிமையானது கவர்ச்சி இல்லாததது அதனால்தான் அதை நாம் பின்பற்றுவதும் நம்புவதும் சிரமமாக இருக்கிறது.
இராஜஇராஜேஸ்வரி அவர்கள் வழங்கிய விருது
Saturday, 16 July 2011
இதுதான் அரசுகளின் அறமா?
ஒரு
இனத்தின்
விடுதலை வேட்கை
எங்கனம்
தீவிரவாதமாகும்?
என்
இனப்பெண்களின்
மார்பகம்
எங்கனம்
வெடிகுண்டாய்
மாறும்?
சிங்கள நாய்கள்
சோதித்து பார்த்ததாம் .
உலகத்தீரே
இதுதான் அறமோ?
மனித உரிமைகளை
வாய்கிழியப் பேசும்
போலிக்கனவான்களே!
பச்சைக்குழந்தைகள்
பாசமிகு முதியோர்
சூலுற்ற பெண்கள்
இருந்த இடங்களில்
பாஸ்பரஸ்
குண்டுமழை ...
பொழிந்து கொன்றது
எந்த நாட்டு
அரச நீதி ?
இவர்களை கொல்ல
எவன்கொடுத்தான்
அதிகாரம் ?
சிங்கள
நாய்கள் எப்படி
என்னினத்தை
வேட்டையாடியது ?
உலக
தமிழ் அறிஞர்களே !
நீவீர் ஏன்
இன்னும்
ஈழத்தமிழரை
அழித்தவர்களை
அறம்பாடி அழிக்கவில்லை ?
அரிதாரம்
பூசாத என்
வார்த்தைகள்
உங்களை வசப்படுத்தாமல்
போகலாம்.
ஈழத்தில்
நடந்த போர்குற்றங்கள்
இந்த உலகின்
செவிட்டுக்காதுகளுக்கும்
குருட்டுக் கண்களுக்கும்
இன்னுமா புரியவில்லை ?
இந்த வசனத்தின் காரணம் ஐயா வைகோ அவர்கள் கல்லுரி வாசல்களில் நின்று வழங்கிய குறுவட்டை பார்த்ததால் எழுதப்பட்டதாகும் .
Saturday, 9 July 2011
கற்றுக்கொடுக்காதபோதும் ....
நானும் சராசரி
பெண்தான் .
என்னுள்ளும்
ஆயிரமாயிர
போராட்டங்கள் .
பலமுனையிலிருந்தும்
நெருக்குதல்கள்.
தாக்கு பிடிக்கயியலா
எத்தனையோ
சுமைகள்
கொடுமைகள் .
வறுமையோடு
போராடுவது
தற்கொலைக்கு
ஒப்பானது .
வழ்கையினுடனான
எனது போராட்டத்தில்
நானே தலைமை
தாங்குகிறேன் .
நானே வீரனுமாகிறேன் .
தோல்வி காணும்
போது எல்லாம்
எவரும்
ஆறுதால் கூறவுமில்லை.
தட்டிக்கொடுத்து
உற்சாக படுத்தவுமில்லை
இதற்காக
நான் ...
கலங்கியதுமில்லை.
இந்த சமூகம்
கற்று கொடுக்காத
போதும்
கட்டைவிரலை
கேட்கிறது .
பெண்தான் .
என்னுள்ளும்
ஆயிரமாயிர
போராட்டங்கள் .
பலமுனையிலிருந்தும்
நெருக்குதல்கள்.
தாக்கு பிடிக்கயியலா
எத்தனையோ
சுமைகள்
கொடுமைகள் .
வறுமையோடு
போராடுவது
தற்கொலைக்கு
ஒப்பானது .
வழ்கையினுடனான
எனது போராட்டத்தில்
நானே தலைமை
தாங்குகிறேன் .
நானே வீரனுமாகிறேன் .
தோல்வி காணும்
போது எல்லாம்
எவரும்
ஆறுதால் கூறவுமில்லை.
தட்டிக்கொடுத்து
உற்சாக படுத்தவுமில்லை
இதற்காக
நான் ...
கலங்கியதுமில்லை.
இந்த சமூகம்
கற்று கொடுக்காத
போதும்
கட்டைவிரலை
கேட்கிறது .
Saturday, 2 July 2011
முலை திருகி எரிந்து கொன்றழிக்கவும் ...
போலித்தனமில்லா
உன்னுடனான
தொடர்புகளை
நான் நாளும்
உணர்வதால்
இந்த குமுகம்
குற்றமுடையதுதான்
என்பதை
புரிந்து கொள்ள
முடிகிறது என்னவனே ...
பொய்யும் வழுவும்
அரசபீடம் ஏறுகிறது
என்பதும் ...
நேர்மையும்
அர்பணிப்பு களும்
அலட்சியம்
செய்யபடுகிறது
என்பதான
உங்கள் ஆதங்கம்
நியாயத்தை
உணர்த்துகிறது அன்பே ...
அதற்காக நான்
பொதுநல
வாதியாகிட
முடியாது .
நான் தன்னலம்
எண்ணம் கொண்டவள் தான் .
நேர்மை பேசி
நீ ...
அழிவதை
ஏற்றுக்கொள்ள முடியாது .
அதையே ...
வேடிக்கை பார்க்கும்
கையாலாகாத
இந்த சமூகத்தை
முலைதிருகி எரிந்து
கொன்று அழிக்கவும்
என்னுள்ளம்
ஒப்பாது ...
மன்னவனே
இந்த மாக்கள்
கூட்டத்தை விடுத்து
திக்கு தெரியாத
காட்டிற்குள்
சென்றாகிலும்
நம்...
வாலிபத்தின்
வசந்தத்தை
தேடுவோம் வா .
உன்னுடனான
தொடர்புகளை
நான் நாளும்
உணர்வதால்
இந்த குமுகம்
குற்றமுடையதுதான்
என்பதை
புரிந்து கொள்ள
முடிகிறது என்னவனே ...
பொய்யும் வழுவும்
அரசபீடம் ஏறுகிறது
என்பதும் ...
நேர்மையும்
அர்பணிப்பு களும்
அலட்சியம்
செய்யபடுகிறது
என்பதான
உங்கள் ஆதங்கம்
நியாயத்தை
உணர்த்துகிறது அன்பே ...
அதற்காக நான்
பொதுநல
வாதியாகிட
முடியாது .
நான் தன்னலம்
எண்ணம் கொண்டவள் தான் .
நேர்மை பேசி
நீ ...
அழிவதை
ஏற்றுக்கொள்ள முடியாது .
அதையே ...
வேடிக்கை பார்க்கும்
கையாலாகாத
இந்த சமூகத்தை
முலைதிருகி எரிந்து
கொன்று அழிக்கவும்
என்னுள்ளம்
ஒப்பாது ...
மன்னவனே
இந்த மாக்கள்
கூட்டத்தை விடுத்து
திக்கு தெரியாத
காட்டிற்குள்
சென்றாகிலும்
நம்...
வாலிபத்தின்
வசந்தத்தை
தேடுவோம் வா .
Saturday, 25 June 2011
இன்முகம் காட்டி எப்படி பேசுகிறாய் அன்பனே ?
உன் ...
நினைவுகள்
என்னைத்தாக்கும்
போதெல்லாம்
கோடைமழைஎன
கொட்டித்தீர்க்கிறது
கண்கள் .
ஆண்மை மீறாத ஆண்மை
அமைதி
வியக்கவைக்கும்
பொறுமை எதற்கும்
கலங்காத நெஞ்சம் .
இந்த ...
சமூகத்தைப்பற்றிய
சரியான புரிதல் .
வறுமை உன்னை
ஆட்டங்கான
வைக்க நேர்ந்தபோது
ஆண்மைதவறாமல்
காத்தமை .
உன் ...
இலையுதிர்காலத்து
நாட் குறிப்பேட்டை (டைரி )
காணநேர்ந்தபோது
வாய்விட்டே
கதறி அழுதே அல்லாவா
போனேன் .
எப்படி ...
எப்படி ....
உன்னிதயத்தை
இரும்பாக்கிக்கொண்டு
அத்தனையும்
பதிவு செய்தாய் .
இன்முகம்
காட்டி எப்படி
எல்லோரிடமும்
பேசுகிறாய் அன்பனே? இன்றைய சூழலில் காதல் வெறுமனே உடலை கண்டு காதல் என கற்பிதம் செய்துகொள்ளுகிறது. காதல் உடல் அல்ல உள்ளம் சார்ந்தது என்பதையும் காதல் பற்றிய முழுமையான புரிதலை உண்டக்கவுமே இந்த ஆக்கங்கள் எழுத்து பிழை இருப்பின் சுட்டிகாட்டும் அன்பர்களுக்கு எமது உளம் கனிந்த பாராட்டுகள் சொற்பிழை இருப்பின் சுட்டிகாட்டுக என்றும் நன்றியுடன் மாலதி .
Saturday, 18 June 2011
கனவுலகில் வாழ்பவள் இல்லை
ஆயிரம் மலர்கள்
பூத்துக் குலுங்கும்
கல்லூரி தோட்டத்தில்
பூத்த புதுமை
மலரென்றாய்.
காதலில் தோற்று
கல்லறைக்கு
அனுப்புவோருக்கு
நடுவே ...
கலங்கரை
விளக்காய் நின்றாய்
என்றாய் .
சட்டைப்பையின்
கனத்தை
கணக்கெடுக்காமல்
உண்மைக்காதலை
வென்று எடுத்தேன்
என்றாய்.
உண்மையை ...
எளிமையை கண்டு
இகழ் கிறவர்களுக்கு
நடுவே வலிமை
நிறைந்த
வாழ்க்கைப்பாதையை
தேர்வு செய்தேன் என்றாய்.
மனிதத்தை
மதிக்கத்தெரிந்ததால்
என்னை முழுமையாக
தத்தெடுத்துக் கொண்டேன் என்றாய்.
உயிரே ...
நான் கணவுலகில்
வாழ்கின்றவள் இல்லை .
உன் ...
கண்ணெதிரே
வாழ எண்ணுகின்
அதனால்தான் அன்பே .
மாறுபட்ட கோணத்தில் இந்த இடுகை பதிவு செய்ய எண்ணினேன் மீண்டும் இந்த இடுகையும் காதலை மையப்படுத்தியே அமைந்து விட்டது .
Sunday, 12 June 2011
நீ என்னுள்ளத்தை ஆக்கிரமித்து கொண்டதால் ...
உன்....
தேடலின்
தகுதிகாண் பருவத்தில்
நான்வெற்றி
பெற்றதாய் சொன்னாய் .
என்னை...
வேண்டுமென்றே
சீண்டிப்பார்த்து
என்சகிப்புத்தன்மையை
அளவிட்டதாக கூறினாய்.
இன்பத்திலும்
துன்பத்திலும்
எனது உளவியலை
படம்பிடித்ததாக
பகிர்ந்துகொண்டாய்.
மற்றவர்களுடனான
தொடர்பில்
நான் தேர்ச்சிபெற்றதாக
அறிவித்தாய்.
முதியோர்களுக்கு
அக மகிழ்வுடன்
நான் உதவியதை
பரவசத்துடன்
பட்டியலிட்டாய் .
என்னவனே ...
இவை எல்லாம்
நீ ...
என்னுள்ளத்தை
ஆக்ரமித்துக்
கொண்டதால்
அல்லவா நிகழ்ந்தது ?
தேடலின்
தகுதிகாண் பருவத்தில்
நான்வெற்றி
பெற்றதாய் சொன்னாய் .
என்னை...
வேண்டுமென்றே
சீண்டிப்பார்த்து
என்சகிப்புத்தன்மையை
அளவிட்டதாக கூறினாய்.
இன்பத்திலும்
துன்பத்திலும்
எனது உளவியலை
படம்பிடித்ததாக
பகிர்ந்துகொண்டாய்.
மற்றவர்களுடனான
தொடர்பில்
நான் தேர்ச்சிபெற்றதாக
அறிவித்தாய்.
முதியோர்களுக்கு
அக மகிழ்வுடன்
நான் உதவியதை
பரவசத்துடன்
பட்டியலிட்டாய் .
என்னவனே ...
இவை எல்லாம்
நீ ...
என்னுள்ளத்தை
ஆக்ரமித்துக்
கொண்டதால்
அல்லவா நிகழ்ந்தது ?
Sunday, 5 June 2011
வேள்விச் சாலையாக்கிக் கொள்ளட்டும்
உன்னைப்பற்றிய எந்த குறிப்புமில்லை என்னிடம் . ஆனாலும் ... என்னிதயத்தை -நீ நிறைத்துக் கொண்டாய். நான் ... வரைந்து வைத்துள்ள வரைபடத்தை -நீ ஒத்திருப்பதாக காட்டுகிறது உன் எழுத்து. நீ... ஆக்கிரமித்துக்கொள்ள எண்ணுவது என்னுடலையா என்னுள்ளத்தையா என்பதை வைத்தே என் தலைஎழுத்து நிர்ணயிக்கப் படும் என்பதை நானறிவேன். நீ ... என் கற்ப்பை காவு கேட்கும் கள்வனல்ல. நிறம் மாறும் பச்சோந்தியல்ல என்பதை பறைசாற்றுகிறது உன் பால்முகம் . நீ ... பாலபாடம் பயின்ற பல்கலைகழகம் எது என்பதை அடையலாம் காட்டு. இந்த ... பாழாய்ப்போன முடைநாற்றம் வீசும் போலிச்மூகம் அதை வேதம் பயிலும் வேள்விச் சாலையாக்கிக் கொள்ளட்டும். | Expand all Collapse all Forward all |
Subscribe to:
Posts (Atom)





