நாங்கள் சந்தனத்திற்கும்
சாக்கடைக்குமான
வேறுபாட்டை அறியாதவர்கள் .
போலிகளுக்கு புகழ்
மாலை சூட்டி
மகிழுகிறவர்கள்.
நேர்மையை புதைத்துவிட்டு
அவலங்களை
அரங்கேற்றம் செய்கிறவர்கள்.
புதையலை ஒதுக்கிவிட்டு
பொய்களை தேடிக்கொண்டு
இருப்பவர்கள் .
தத்துவங்களைத் தவறவிட்டு
சதிகளுக்கு ஆளாகிக்
கொண்டு இருப்பவர்கள்.
சாதியால்
சண்டையிட்டு
சங்கடங்களை ...
விலை பேசுகிறவர்கள் .
நாங்கள் தமிழ் நாட்டுத்
தமிழர்கள் .
தமிழன் எப்போதுதான் விழிப்பனோ?
