மின்னஞ்சலே ...
என் பாட்டுடைத்தலைவனிடம்
இருந்தான செய்தி
விரைந்து கொண்டுவா
நான் வேட்கையுடன்
காத்திருக்கிறேன்.
நாளது தேதிவரை
சேதியில்லை.
என் மன்னவன்
மாலையுடன் வருவான்
என மாலைவரை
காத்திருந்தேன் .
மாலையுமில்லை என்
மன்னவனுமில்லை
இரவாகிப் போனது .
இருட்டு ...
அச்சத்தையும் தரும்
இச்சையையும் தரும்
இரண்டும் கொடுமையானது
தீர்வுமட்டும் ஒன்று என்னவன்.
ஏட்டில் எண்ணங்களைப்
பதிக்கலாம் ...
எண்ணுனர்வினை எப்படிப்
பதிப்பேன் .நீ
அறிவாயா?
அவரின் அடையாளம்
கேட்டாய்
நேர்மை அவர்பாதை
உண்மை அவர்பேச்சு
சமூகநலன்அவர்கொள்கை
இப்படித்தான் என்னுள்ளத்தில்
அவர் ...
தேடு மின்னஞ்ச்சலே
விரந்துதேடு
நெஞ்சத்தில் உள்ள
அவரை நிசத்தில் கொண்டுவா.
தூதுப் பிரபந்தங்கள் கலி வெண்பாவிற் செய்யப் படுத்தல் வேண்டும்
என்பது இலக்கணம் .நமக்குஅது தெரியாது என்பதால் / இந்த நறுக்கு (புதுக் கவிதை
) களுக்கு இலக்கணம் இன்மையால் உங்கள் முன் வாசிக்கப் படுகிறது .
என் பாட்டுடைத்தலைவனிடம்
இருந்தான செய்தி
விரைந்து கொண்டுவா
நான் வேட்கையுடன்
காத்திருக்கிறேன்.
நாளது தேதிவரை
சேதியில்லை.
என் மன்னவன்
மாலையுடன் வருவான்
என மாலைவரை
காத்திருந்தேன் .
மாலையுமில்லை என்
மன்னவனுமில்லை
இரவாகிப் போனது .
இருட்டு ...
அச்சத்தையும் தரும்
இச்சையையும் தரும்
இரண்டும் கொடுமையானது
தீர்வுமட்டும் ஒன்று என்னவன்.
ஏட்டில் எண்ணங்களைப்
பதிக்கலாம் ...
எண்ணுனர்வினை எப்படிப்
பதிப்பேன் .நீ
அறிவாயா?
அவரின் அடையாளம்
கேட்டாய்
நேர்மை அவர்பாதை
உண்மை அவர்பேச்சு
சமூகநலன்அவர்கொள்கை
இப்படித்தான் என்னுள்ளத்தில்
அவர் ...
தேடு மின்னஞ்ச்சலே
விரந்துதேடு
நெஞ்சத்தில் உள்ள
அவரை நிசத்தில் கொண்டுவா.
தூதுப் பிரபந்தங்கள் கலி வெண்பாவிற் செய்யப் படுத்தல் வேண்டும்
என்பது இலக்கணம் .நமக்குஅது தெரியாது என்பதால் / இந்த நறுக்கு (புதுக் கவிதை
) களுக்கு இலக்கணம் இன்மையால் உங்கள் முன் வாசிக்கப் படுகிறது .