இராஜஇராஜேஸ்வரி அவர்கள் வழங்கிய விருது

இராஜஇராஜேஸ்வரி  அவர்கள்  வழங்கிய  விருது

Wednesday, 22 May 2013

விடைபெறுகிறேன் .....

இனி  வருவேனா  இல்லை வரமாட்டேனா    ஒன்றும்  புரியவில்லை
விடைபெறுகிறேன் . நன்றி  வணக்கம் .....

                உண்மையுள்ள  மாலதி

Saturday, 18 May 2013

பிழை.... செய்தேன்

 நீ  ஒரு கோணத்தில்
சிந்தித்து பேசினாய் .

நான் ஒரு கோணத்தில் புரிந்து
கொண்டேன் .
 உன்கோனத்தை
எனக்கு புரிய வைக்கவில்லை.

எல்லாமே  புரிதல் இன்மையால்
வந்த பிழை .

உன்கோணம் உனக்கு சரியென
தோன்றும் .

புரியாமையால்
எனக்கு தவறென படும் .

இதுதான் நமக்குள் காட்சி
பிழையாகிப் போனது .

சரித்திரத்திக்கும்
தரித்திரத்திற்கும்
வேறுபாடு?

பிழை செய்தேன்
மன்னித்துவிடு

சராசரியாக
இருந்தேன்
மாறுபட்டவன்
மாறுபட்டு சிந்தித்தேன்
செய்தமை தவறென
உணர்ந்தேன்
மனித்துவிடு ...

Thursday, 25 April 2013

பொறுப்புடன் வாழ்தலும் தான் .

உள்ளமும் உடலமும் 
உயிர்ப்போடு  இருக்கிறதென்றால் 
சூடுபற்றி  உடல் 
இருத்தல்  தேவை.

கண்ணில் கண்டவை 
எல்லாமே ...
உண்மையன்று 
மெல்ல மெல்ல ...
உள்  புகுந்து 
உண்மையரிதல் 
உயர்ந்த  பண்பு.

கண்ணே...
மணியே ...
கற்கண்டே  என்பதன்று 
வாழ்வு .

ஏற்றத்திலும்  இறக்கம் 
காணுகையிலும் 
குத்திக் கட்டாமல் 
கூடி 
வாழ்தல்தான் 
இனிமையன  வாழ்வின் 
தொடக்கமன்றோ .

அறியாமையில் 
உழலும்  மாக்கள் 
கூட்டம்  சிந்திக்க 
வைப்பதுதான் 
சீரிய சிந்தனையாளர்களின் 
உண்மையன வேலை .

உயிர்ப்போடு இருத்தல் 
தன்னலத்தோடு 
இருத்தலுமன்று 
பொது நலந்தாங்கி 
பொறுப்புடன் 
வாழ்தலும்  தான் .

 


Saturday, 6 April 2013

என் பாதைக்கு பரிதியாகி வா.

உன்னுடனான
வொவ்வொரு நொடியும்
மறக்க இயலாதவைகள் .
உன் பேச்சுகள்
வொவ்வொன்றும்
மறுதலிக்க இயலாதவைகள்.
நீ காட்டும்பாதைகள்
பழுதற்றவைகள்.

நீ செய்யும்  செய்கைகள்
எல்லாமே ...
மகிழத்தக்கவை.

நீ பொழியும்
அன்பு மாசற்றவை .


நீகாட்டும்
கருணை  கணக்கற்றவை .

காலம் காட்டிய
குன்றிலிட்ட
குலவிளக்கே ...


என்  பாதைக்கு
பரிதியாகி  வா.

என்றும் தமிழன்புடன் ....
மாலதி .

Thursday, 21 March 2013

உன்னமுதில் திகட்டி நிற்கிறேன் .

நீ  திறந்து காட்டிய 
உள்ளம் ...
என்னை கட்டிப்போட்டது .

நீ சுட்டிக் காட்டிய

செய்திகள்
என்னை  வட்டமிடுகிறது .

வாட்டம் கொண்ட

நான்  வளைந்து
நிற்கிறேன் .

காய்த்து  குலுங்கும்

கனியமுதாய்
மாற்றிக்  காட்டினாய் .

விண்ணை  முட்ட

உன்னமுதில்
திகட்டி  நிற்கிறேன் .

Tuesday, 19 March 2013

தமிழகத்து  தெருக்களில் எல்லாம்
அரசியல் நரிகள் ...
ஊளையிடுகிறது .

காட்டிக்  கொடுத்தவர்
கண்டு கொள்ளாதவர் ...
நீலிக்கண்ணீர்  விட்டு 
நடிப்பு கட்டுகிறவர்கள்
பிணம் தின்னிக் கழுகுகள்
எல்லோரும் வேடமிடுகிரார்கள்

நாடாளுமன்ற  தேர்தல்
வந்து  தொலைக்கிறது
தமிழர்கள்  வாக்கு
பிச்சை  இடவேண்டும் .

ஈழ சிக்கலில்
போதுவாக்கெடுப்பே
சிறந்த  தீர்வு .

தன்னெழுச்சி  மிக்க
மாணவர் போராட்டம்

இனவுணர்வை ...
தட்டி  எழுப்பட்டும் .

மரபுவழிப்பட்ட
தமிழரின்  மறத்தனம்
உலகே அறியட்டும் .

மாணவர் போரட்டத்திக்கு
ஆதரவு  கொடுத்து
பலம் சேர்ப்போம்.

Saturday, 23 February 2013

என்னிதயத்தில் உயர்ந்து நிற்கிறாய்.



அன்புகாட்டுவதில்
புதுமை படைக்கின்றாய் .

மொழிபோல
நிலைத்து  நிற்கின்றாய் .

முன்விட்டு  பின்னர்
அறிவை சுவைக்கின்றாய் .

கோ போல என்னிதயத்தில்
உயர்ந்து  நிற்கிறாய்.

வம்சம்  தழைக்க
வழியும்  செய்கின்றாய்.

கொஞ்சம்  தானே
சிரித்துக்  கொள்கின்றாய்.

குறைவிலா
மகிழ்வூட்டுகிறாய் .

நிறைவான இன்பம்
காண தூண்டுகிறாய்.

கண்ணில்  பெரு
ஒளியாய் ...

இதயத்தே
இனிய மகிழ்வாய்....
ஆர்பரிக்கும் ...
அலைகடலாய்.....
இன்முகம் காட்டுகிறாய்.
திக்கு தெரியாமல்
இன்பம் காணுகிறேன் ....
துணையாய் வந்திருக
பற்றிக் கொள் ....


     தற்செயல்தான்  இந்த ஆக்கத்தில்  ஒரு குறிப்புஒன்று  பொதிந்து  உள்ளதை காணுகிறேன் .
கண்டு சொல்லுங்கள்  பரிசொன்றை  வெல்லுங்கள் .

தமிழன்புடன் ....
மாலதி .