இராஜஇராஜேஸ்வரி அவர்கள் வழங்கிய விருது

இராஜஇராஜேஸ்வரி  அவர்கள்  வழங்கிய  விருது

Saturday 23 February 2013

என்னிதயத்தில் உயர்ந்து நிற்கிறாய்.



அன்புகாட்டுவதில்
புதுமை படைக்கின்றாய் .

மொழிபோல
நிலைத்து  நிற்கின்றாய் .

முன்விட்டு  பின்னர்
அறிவை சுவைக்கின்றாய் .

கோ போல என்னிதயத்தில்
உயர்ந்து  நிற்கிறாய்.

வம்சம்  தழைக்க
வழியும்  செய்கின்றாய்.

கொஞ்சம்  தானே
சிரித்துக்  கொள்கின்றாய்.

குறைவிலா
மகிழ்வூட்டுகிறாய் .

நிறைவான இன்பம்
காண தூண்டுகிறாய்.

கண்ணில்  பெரு
ஒளியாய் ...

இதயத்தே
இனிய மகிழ்வாய்....
ஆர்பரிக்கும் ...
அலைகடலாய்.....
இன்முகம் காட்டுகிறாய்.
திக்கு தெரியாமல்
இன்பம் காணுகிறேன் ....
துணையாய் வந்திருக
பற்றிக் கொள் ....


     தற்செயல்தான்  இந்த ஆக்கத்தில்  ஒரு குறிப்புஒன்று  பொதிந்து  உள்ளதை காணுகிறேன் .
கண்டு சொல்லுங்கள்  பரிசொன்றை  வெல்லுங்கள் .

தமிழன்புடன் ....
மாலதி .