இராஜஇராஜேஸ்வரி அவர்கள் வழங்கிய விருது

இராஜஇராஜேஸ்வரி  அவர்கள்  வழங்கிய  விருது

Monday 16 April 2012

நான் கற்றுத்தேறிய கல்லூரியும் நீ நீ ... நீயே .

பிழையான  கற்ப்பிதங்களை
கொள்கிறவன் அல்லன் நீ .

காதலில்  நேர்மையான

கோட்பாடுகளைக்
கொண்டவன் நீ .

இருவருக்குமான

முழுமையான புரிதலில் 
தேறியபிறகே
காதலில்  தடம்
பதிய  வேண்டும்  என்கிறவன் நீ .

புரிதல் உடலில்  இருந்தல்ல

உள்ளத்தில்  இருந்தான
வேட்கை  கொள்ள வேண்டும்
என்கிறாய்.

கண்டதும்  காதல்

என்ற   காட்டுமிராண்டித்
தனத்தை ...
கண்மூடித்தனமாய்
எதிர்க்கிறவன் நீ .

புரிதலுக்கு  பிறகேயான

பிரிதலையும்
சாடுகிறவன்    நீ.

நான்  கற்றுத்தேறிய

கல்லூரியும்  நீ
நீ ... நீயே .

Monday 9 April 2012

காதலில் பழங்கால பெண்கள்


 பழங்கால  பெண்கள்
காதலைக் 
கண்மூடித்தனமாய்
அணுகவில்லை .

கல்வி கற்றவனாக ...
வீரனாக ....
நேர்மையன  வனாக...
வளப்பம் நிறைந்த
நாட்டவனாக...
இப்படி  காதலனின்
உண்மை 
நம்பகத்தன்மைகளை
அறிந்தே  காதலில்
வீழ்ந்தனர்
காதலனை  வீழ்த்தினார்.

காதலில் அப்போது
உறுதியும்  இருந்தது .
நேர்மையும்  பிறந்தது
இல்லறமும்  நல்லறமே
மாறியது .

இன்றோ ...
உள்ளத்தைக்  கணக்கில்
கொள்ளாமல்
கள்ளத்தை  உள்ளத்திலேந்தி
உடலை  இலக்காய்
கொண்டு
பொன்னே...
தேனே  என வழிந்து....
விரைந்து  திகட்டிப் போய்
சீரழிகின்றனர் .

விட்டுக் கொடுத்து
வாழ்வோம் .
தட்டிக் கொடுத்து
தேற்றுவோம்.
தமிழ்
பாரம்பரியத்தை
பண்பாட்டைக் காப்போம்.
மீட்ப்போம்.