இராஜஇராஜேஸ்வரி அவர்கள் வழங்கிய விருது

இராஜஇராஜேஸ்வரி  அவர்கள்  வழங்கிய  விருது

Saturday 26 November 2011

இதைத்தான் ... இப்படித்தான்



நாளும் ...
நானும்
இதைத்தான்
நோக்கி இருந்தேன் .

உன்னிடமிருந்தான
பச்சை விளக்கு
எரிவதும்  நிறம் மாறுவதும்
தொடர்கதையாகிப்  போகிறது .

உள்ளம்  உள்ள
இடத்தில்  சிலருக்கு
கள்ளம்  இருக்கும் .

உன்னுள்ளம்
உயர்ந்ததென  நானறிவேன் .

நல்லதை  விரைந்துசெய்
தீயதை  தள்ளிப்போடு .

இது ...
நேர்மையானது  தானே .

நீ  நல்லதையும்
அல்லவா தள்ளிப்
போடுகிறாய் ?

தேவைகள் ...
தேவைகளாகவே
தொடரும்போது
தீர்வுகள்  தோற்றம்
கொள்ளதன்பனே .

நம்
இணைப்பிற்க்கான
வழியை  விரைந்து
சமைப்பாயா ?


            







Thursday 24 November 2011

படி எடுத்தல்



மனிதப் படிஎடுத்தலின்
மகத்துவம்  அறிந்திருக்கவில்லை
இப்போது .

கால்வழிக் குற்றங்கள்
கண்மூடித்தனமாய்த்
தோற்றங்  கொண்டு
த்
தொடர்கிறது .

நதியின்  பிழையன்று
நறும் புனலின்மை
போல
விதியின்  பிழையன்று
நோயுற்ற  குமுகமும்
நோய்க்கான  காரணங்களும் .

இது ...
நம் மதியின்
பிழை .

உடலினை
ஊடுருவிப்  பார்த்து
நோய்க்கான
காரணமதைப் புறந்தள்ளி
நம் மண்ணின்
மருத்துவமதை
கைக்கொண்டால்
பிணிவந்து வருத்திடுமா ?

நம் பிள்ளைகள்
நோய்  வந்து
வீழ்ந்திடுமா ?
சிந்திப்போம் .


                   அக்கா சந்திரகௌரி அவர்கள்  கேட்டுக் கொண்டமைக்காக
இந்த ஆக்கம்  போதுமா  அக்கா ?

Saturday 19 November 2011

எதையும் தாங்கு....



எதிர் பார்ப்புகள்
தோற்கும்  வெல்லும்
ஆயத்தம்மாகு .

தோல்விகள்  எல்லாம்
சுமையும்  அல்ல
சுழியமும்  அல்ல .

இமயத்தை   மயிரால்
கட்டி இழு .

வந்தால்  மலை
போனால்  மயிர் .

விடியட்டும்  என

காத்திராதே .

விடியவை  வாழ்வை .


                           மறப்போம் மன்னிப்போம்  

Saturday 5 November 2011

நமது இடுகைக்கு  இப்படியாக  ஒரு பின்னூட்டம்  அந்துள்ளது அதை அப்படியே  உங்களின் பார்வைக்கு
karoopan
has left a new comment on your post "நான் ஏன் தமிழீழத்தை ஆதரிக்கிறேன் .":

அன்புத்தங்கை மாலதி அவர்களுக்கு ,what is on?
உங்களின் இடுகைகளைக் கண்டேன் முதலில் எனது கடுமையான கண்டனங்ககளை தெரிவித்துக் கொள்ளுகிறேன் காரணம் இங்கு தமிழகத்தில் இருக்கிற சிக்கல் களை உங்களைப் போன்றோருக்கு தெரிவிக்க வேண்டும் நீங்கள் வானத்தில் வட்டம் அடிப்பவர்கள் அதனால்தான் உங்களின் கண்களுக்கு தமிழத்தில் உள்ள சிக்கல்கள் தெரிய வில்லை போல . இலங்கை சிக்கல்கள் அவர்களுக்கானது அதை நாம் ஏன் தலையில் எடுத்துப் போட்டுக் கொண்டு நோக வேண்டும் . to my maind நீங்கள் உங்களின் உழைப்பை இதில் செலவிட வேண்டாம் யாரோ ஒருவர் கருத்துப் போட்டு இருக்கிறார் அந்த சிக்கல் எங்களுக்கானது என குறிப்பிட்டு உள்ளார் நாம் ஏன் அதை தலையில் போட்டுக் கொண்டு அழ வேண்டும் அழ வேண்டியவன் எல்லாம் சினிமாவுக்கு நடிகைகளின் இடுப்பை ரசித்துக் கொண்டு இருக்கிறான் உங்களைப் போன்ற இளையவர்கள் உழைப்பை வேண்டிக்க வேண்டுமா ? உங்களின் ஆற்றல் எவ்வளவு மகத்தனமானது to try ones best என்பார்கள் அதுபோல உங்களின் ஆற்றல் இங்கு உள்ள மக்களுக்காக செலவிடுங்கள் . we must give due respect to the fair sex என்கிற அடிப்படை கருத்தை கூட தெரிந்து கொள்ளாமல் இருக்கிறன் . அவனிடம் சொல்லுங்கள் clear off, you have given me enough trouble. என I agree with all you say . but அந்த இலங்கை சிக்கல்களுக்கு எனது அதரவு இல்லை .

உங்களின் மகத்தான எல்லா கவிதைகளையும் கண்டேன் நீங்கள் கேரளத்தில் மட்டும் இருந்து இருந்தால் உங்களை மாநில முதவரே வந்து பாராட்டி இருப்பார் அனால் இந்த பாழாய் போன தமிழ் நாட்டில் வந்து பிறந்து தொலைத்து விட்டீர்கள் உங்களின் கவிதைகளை எல்லாவற்றையும் பள்ளிக் கூடங்களுக்கு அல்ல காலேஜிக்கு புக்காக போட்டி இருக்க வேண்டும் இங்கு see eye to eye இந்த ஒத்த கருத்து என்பது இந்த கருத்துக் களை பாராட்டுகிற பண்பாடு தமிழ் நாட்டில் கொஞ்சமும் இல்லை ஆனாலும் கண்டுக்காமல் விட்டு விடுவான் பவம் அவனின் கண்ணை மூடிக்கொண்டு இருக்கிறன் நீங்கள் அவனின் கண்களை திறக்க அந்த போரில் to give battle to நீங்கள் வெற்றி பெற முயலும் போது சில silly ass இடம் மாட்டிக் கொண்டு விழி பிதுங்கி நிற்கிறீர் . I WILL SEE TO இதை நான் முழுமையாக கவனிக்கிறேன் .TAKE BACK என நீங்கள் கூறினால் அந்த நாய் sorry நான் அந்த பின்னூட்டம் இட்டவனை இப்படி கூட கூற விரும்பவில்லை காரணம் நாயை கேவலப் படுத்துவானேன் literature is bornour of life. belongs to life and exists for like என்பார் ஹட்சன் இலக்கியம் என்பது வாழ்க்கையில் பிறப்பது . வாழ்க்கை சார்ந்தது வாழ்கையாக இருப்பது என்பது அந்த கூற்று .இப்பட்டிபட்ட தரமான படைப்புகளை இங்கு காண்பது அரிதாக காணப்படுகிறது நாம் இங்கு சாதி ரீதியாக சிக்கிக் கொள்ளத் தேவையில்லை அது கிடக்கிறது இரண்டு பக்கமும் கூர்மையான கத்தி அது அதை பக்குவமாக கையாள வேண்டும் இல்லையேல் இருவரையும் கிழித்துவிடும் அதவும் கூட ஏழைகளைத்தான் குத்தும் அதை விடுவோம்

.



 


Imitative art is an inferiour, wich maries an inferiour and will have aninferiour of spring என்பார் பிளாட்டோ தரமற்ற போலி எழுத்துப் பற்றி பேச வேண்டிய கட்டாய மில்லை போலிகள் பெருகட்டும் இதுபோன்ற உமது வார்த்தயில் சொல்லுவதானால் கழிசடைகள் இருந்து விட்டு போகட்டும் நாம் நமது பாதையில் தூய்மையாக நடப்போம் நமது நாட்டை இளையோரை மீட்டோடுப்போம் உங்களின் எழுத்து விண்ணை முட்டும் . அதுவரை நீங்கள் பொருத்தருள வேண்டும் . நீங்கள் மதிக்கும் அந்த இலங்கைத் தமிழர் எத்தினை போர் சமூகம் சார்ந்து எழுது கிறார்கள் என்று போய் அவர்களின் இடுகைகளை பார் நடிகை உதட்டையும் மார்பையும் காட்டிக்க் கொண்டு இருக்கிறார்கள் . விளையாட்டு பற்றி எழுதுகிறான் அல்லது தன் சொந்த கதை சோக கதை எழுது கிறான். இப்படி எழுகிறேன் என கோபப் பட வேண்டாம் உண்மை அப்படி இருக்கிறது . வெளியில் இருக்கலாம் இந்த ப்லொக்ச்பொட் இதைத் தானே இன்றைய இளசுகள் அதிகமாக நேசிக்கிறது . என்கையில் விருது கொடுக்கும் சக்தி இருந்தால் உலக விருதே உனக்குதருவேன் சமூகம் சார்ந்த அது சந்திக்கும் சிக்கலினை அலசி அதற்க்கு தீர்வு காண்பது எளிதல்ல .

கடைசியாக ஒரு வேண்டுகோள் எனது தங்கை பணி செய்யும் கல்லூரியில் கவியரங்கம் நடக்கிறதாம் உங்கள் கவிதையை எல்லாவற்றையும் படித்து கட்டுவேன் ஏன் மூன்று தங்கையும் உனது ரசிகர்கள் கவியரங்கத்திற்கு தலைமை தங்க முடியுமா என கேட்டார்கள் தனியான இமெயிலில் நாளையும் நேரத்தையும் குறிப்பிடுகிறேன் தயவு செய்து வெளியுலகிற்கு வா உன்பாதை இந்த சமூகத் திற்காக இருக்கட்டும் .

கடைசியாக ஒரு வார்த்தை அதாவது நலமுடன் பிரச்னை இல்லாமல் இருக்கும் போது கொஞ்சி குலவுவது இருக்கட்டும் பிரச்னை உள்ளபோது அவர்களுக்கு ஆறுதல் தல்தர வேண்டும் அதை நான்கூட செய்ய வில்லை இப்படி வேறு பெயரில் வர வேண்டி இருக்கிறது எல்லோரும் இப்படியே என்பதை புரிந்து கொள் இதுதான் உலகம் .இன்னுமா தவறான பின்னூட்டம் இட்டவன் யாரு என புரியவில்லை.