இராஜஇராஜேஸ்வரி அவர்கள் வழங்கிய விருது

இராஜஇராஜேஸ்வரி  அவர்கள்  வழங்கிய  விருது

Tuesday 19 April 2011

விழிப்போடிருந்தால் விடியல்




மேட்டடிமைதனங்களும்
கண்மூடிதனங்களும்
தொடரத்தான் செய்கியது .

சிறிய வலிகளுக்கே
வற்றாத நீருற்றாய்
வடிக்கிறது கண்கள் .

போலித்தனங்களையும்
மூடப்பழக்க வழக்கங்களையும்
விட்டுவிலக மறுக்கிறது .

வீணர்களின் வெட்டி
பேச்சுகளுக்கு
அஞ்சி முக்காடிட்டு
கொள்ளுகிறது உள்ளம்.

போலித்தனமாய்
விடுதலைபெற
விழைகிறது
தேவைகள் .

அதோ  சாதியென்ற
மாயவலையையும்
கண்மூடித்தனமான
கடவுட் கோட்பாடுகளையும்
உடைத்தெறியும்
ஆரவாரம்
கேட்கும் போது
அறைந்து சர்த்திக்கொள்ளுகிறது
அறிவுக் கதவங்கள் .

விடியல்கள்
தன்தொன்றித்தனமாய்
விடிந்து விடுவதில்லை .

சிற்றுளிகளின்
முத்தங்களை
உள்வாங்காத
கற்கள் சிற்ப்பங்கள் ஆவதில்லை .

இனிய ...
நிலவின்
பயணத்தில் இருளும் பகலும்
இயற்கையின்
விளையாட்டே .

காலங்களின் சுழற்சியில்
விழிப்போடிருந்தால்
மட்டுமே  விடியல் .

12 comments:

MANO நாஞ்சில் மனோ said...

//இனிய ...
நிலவின்
பயணத்தில் இருளும் பகலும்
இயற்கையின்
விளையாட்டே .

காலங்களின் சுழற்சியில்
விழிப்போடிருந்தால்
மட்டுமே விடியல் .//

செம டச்சிங் உண்மையும் கூட....

Chitra said...

போலித்தனங்களையும்
மூடப்பழக்க வழக்கங்களையும்
விட்டுவிலக மறுக்கிறது .

வீணர்களின் வெட்டி
பேச்சுகளுக்கு
அஞ்சி முக்காடிட்டு
கொள்ளுகிறது உள்ளம்.


.......எதார்த்தம்.... சமூக அக்கறையுடன் எழுதப்பட்ட கவிதை. அருமை.

சி.பி.செந்தில்குமார் said...

>>அறைந்து சர்த்திக்கொள்ளுகிறது
அறிவுக் கதவங்கள் .

விடியல்கள்
தன்தொன்றித்தனமாய்
விடிந்து விடுவதில்லை .


அறைந்து சாத்திக்கொள்ளுகிறது
அறிவுக் கதவங்கள் .

விடியல்கள்
தான் தோன்றித்தனமாய்
விடிந்து விடுவதில்லை .

வை.கோபாலகிருஷ்ணன் said...

//அறைந்து சர்த்திக்கொள்ளுகிறது
அறிவுக் கதவுகள்//

நல்லா இருக்குது.

[ஆங்காங்கே ஒரு சில எழுத்துப்பிழைகள் உள்ளது போலத்தெரிகிறது.
உதாரணம்:

கற்கள் சிற்ப்பங்கள் ஆவதில்லை .

”சிற்பங்கள்” என்பதே சரியான வார்த்தை ]

Asiya Omar said...

மிக நல்ல கவிதை.உணர்வுகளை அருமையாக எழுதறீங்க..

Priya said...

கவிதையை போலவே தலைப்பையும் அழகா எழுதி இருக்கிங்க.

தமிழ் உதயம் said...

மிக அழகாக, சற்றே எச்சரிகையுடன் முடித்துள்ளீர்கள் கவிதையை.

சென்னை பித்தன் said...

//காலங்களின் சுழற்சியில்
விழிப்போடிருந்தால்
மட்டுமே விடியல் .//
சிறப்பான வரிகள்!

சிவகுமாரன் said...

\\காலங்களின் சுழற்சியில்
விழிப்போடிருந்தால்
மட்டுமே விடியல்//

. சத்தியமான வார்த்தைகள் .

ஹேமா said...

சரியான கஸ்டம் மாலதி.சில கட்டுப்பாடுகள் எங்கள்
இரத்தத்திலேயே ஊறிக்கிடக்கிறதே !

G.M Balasubramaniam said...

அன்பு மாலதிக்கு, முதலில் என் பாராட்டுகள். சிந்தனையின் திசை மாற்றம் முன்னேற்றத்துக்கே..இயற்கையில் நிகழும் விடியல் வேறு,விழிப்போடு இருந்தால் மட்டுமே, உள்ளங்களில் விடியல் காணமுடியும்..அருமை.

நிலாமகள் said...

ந‌ல்லாயிருக்குங்க‌ மால‌தி உங்க‌ சிந்த‌னைக‌ளும் அது பொதிந்த‌ க‌விதையும்!