இராஜஇராஜேஸ்வரி அவர்கள் வழங்கிய விருது

இராஜஇராஜேஸ்வரி  அவர்கள்  வழங்கிய  விருது

Saturday, 25 February 2012

கொலையா கற்பிக்கிறாய் ?



கூட்டுக்குடும்ப வாழ்கை
முறையை  முன்னெடுப்போம் .

முற்றாய்  இன்றையசிக்கலை
இனங்கண்டு  தட்டித்
துரத்துவோம்.

அடிமைமுறைக்  கல்விஇது
அதனால்  ஆளையேகொல்லுது
ஆசிரியையே  வெட்டி  சாய்க்குது .

பாழும் பணத்தின்
ஆசையால் ...
பதவிகளின் தாகத்தால் ...
குடும்ப  உறவகளே
சுமையாய்  மாறுது
பண்பட  வேண்டியவனை
பாடாய் படுத்துத்து .

கல்விக்கூடத்தில்
கத்தியை  பாய்சுது .

பள்ளிப் படிப்பே
சுமையை  தருகுது
சுமையாய் மாறுது.

பதவிகளின்  கனவே
இலக்காய் தொடருது .

அன்பை நாளும்
வளர்த்தோமில்லை.

பண்பைச்  சொல்லி
பழக்கிநோமில்லை .

பணம்தான்  மனிதத்தை
சிதைக்குது ...
அந்த  பணமே
மனிதனைக்  கொல்லுது .

மனிதமே  நீ ...
என்றுதான்  மனிதத்தை
சிந்திப்பாய் .
மனிதனாய்
மாறுவாய் ?

Saturday, 18 February 2012

கோழையல்ல தமிழன்

 

நாங்கள்   தமிழர்கள்
சிற்றின  சிறுமதி
சிங்களன்  சுடுகிறான்
கேரளன்  அடிக்கிறான்
கன்னடன்  துரத்துகிறான் .
ஆந்திரம்  ஏய்க்கிறது
எங்கிருந்தோ  வந்த
இத்தாலி  வணிகக்கக்
கப்பலில்  வந்தவன்கூட
எங்கள்  மீனவர்கள் 
இருவரைக்  சுட்டுக்கொன்றான்  .

அட  பேடி  நாய்களே !

அட  பேடி  நாய்களே !

ஆயுதமின்றி
  எங்கள்தமிழரிடம்
நேருக்கு  நேரே
மோதத் தயாரா ?.

கொட்டக் ...

கொட்டக் ...
மண்புழுகூட  
""மா ""    வீரனாகும். .

உங்கள்வீட்டுப்

பெண்களின்  தாலியைப்பறிக்கும்
எச்சரிக்கை.   


       பொறுத்தருள்க  நமது இடுகையில் வேறு ஒரு  இடுகை  எப்படியோ  வந்து வெளியாகி இருந்தது  அதற்க்கு பின்னூட்டம்  இட்டவர்களுக்கு  பணிவான நன்றியும்  பாராட்டுகளும்  இது எப்படி நேர்ந்தது என  புரியவில்லை  சிரமத்திற்கு பொறுத்தருள்க. 

Monday, 13 February 2012

காதலர்  நாள் 
கற்கவேண்டிய அகவையில் 
கல்வி கற்காமல் 
காதலில்  வீழ்ந்து 
வெம்மியும் போகவைக்கிறது .

முறையான அகவையில் 
பொருட் காரணங்களுக்காய் 
வாழ்வு கிட்டாமல் 
விம்மவும்  செய்கிறது.

இது 
தனியுடமைக்  குமுகம்.
"தானே " போல 
விரைந்து  வந்து 
அழிந்தும்  போகிறது 
அழிக்கவும்  செய்கிறது.

உடல்மட்டும்   இணைவதல்ல
உள்ளமும்  கூடவே 
கள்ளமும் இன்றி 
பள்ளமும்  நீக்கி 
சங்க  மிப்பது
உயிர்ப்பான  காதல்.

உடலால்  வருவது காமம் 
உள்ளத்தால்  இணைவதுகாதல்.
இது  கம்பன் .

அழியாக் காதலில் 
பொருளோ 
இனக்கவற்சியோ
முதன்மை  வகிப்பதில்லை.

விரைந்தொட்டும் பசைபோன்ற 
இனக்கவர்ச்சியை  இனங்காண்போம் 
உண்மைக்காதலை 
கற்றுக்  கொள்வோம் 
கற்றுக் கொடுப்போம் .

நேர்மைக் காதல் 
வெல்லட்டும் . 

            தமிழன்புடன் ....... உங்கள் மாலதி .

       இராஜஇராஜேஸ்வரி  அவர்கள் நமக்கு   தொடர்  வரிசையில் விருது வழங்கியுள்ளார்  அவருக்கு எமது பணிவான நன்றியும் பாராட்டுகளும் .
நானும்  தொடர்  விருதிற்கு ...

1  தீதும்  நன்றும்  இரமணி  ஐயா
2 . புலவர்  ஐயா  அவர்கள் .www.pulavarkural.info
3 வசந்த மண்டபம்  மகேந்திரன்  அவர்கள் .
4 கவியழகன் அவர்கள் .www.kavikilavan.blogspot.in
5  மனவிழி சத்ரியன்          அவர்களுக்கு  விருதுகளை வழங்கி  தொடர்  விருதிற்கு  அழைக்கிறேன் .

மேலும் கூட்டுதல் விவரங்கள்  அடுத்த இடுகையில் .


 

Saturday, 4 February 2012

சா.... தி .....


சாதீயத்தை ....
வெட்டிச்  சாய்ப்பதாலும் 
சமத்துவம்  வென்றெடுக்கப்படும்என்கிறாய் .

பண்பாட்டைப் பேணுவாதல்- நம் 
பாதைகள்  நேராகும்என்கிறாய் .

பகைவனை  யல்ல
பகைமையை 
அழித்த்டுக்க -நாம் 
பண்பட்டு உயர்வோம் 
என்கிறாய்.

உன் ...
பார்வைகள் 
உயர்வானவைகள் 
உன்பாதைகள் 
பக்குவப்படுத்தப்  பட்டவைகள் 
நானும்  தொடர்கிறேன் 
அன்பனே .   




                                    தமிழன்புடன்  மாலதி .....