இராஜஇராஜேஸ்வரி அவர்கள் வழங்கிய விருது

இராஜஇராஜேஸ்வரி  அவர்கள்  வழங்கிய  விருது

Thursday, 24 January 2013

இலக்கணத்தைப் படைப்போம் வா.

வீசுகின்ற   தென்றலும் நீ
பேசுகின்ற  மொழியும் நீ
சுவாசிக்கின்ற காற்றும் நீ
கற்கின்ற  பாடம் நீ.

அன்பையே உன்னுள்ளத்தில்
காட்டு  கின்றாய்
அரவணைத்து  தாயையப்போல்
தேற்று  கின்றாய் .

என் கண்ணீருக்கு
விடைக்கொடுக்க  நினைக்கின்றாய்.
காலம் போல்கடமையை
நீ  செய்கின்றாய்.

கள்ள  மில்லா
உள்ளத்தைக்  காட்டுகிறாய்.
கவிஎழுத  ஒரு
மொழியை  வழங்குகிறாய்.

பால் நிலவே 
பருவத்தின் செழிப்பே ....
உன்  விழிஎழுதும்
பா  வினங்கள்கோடி .

நம்  இலக்கே
இலக்கணமாய்  வாழ்வதுதான் .
என்றாலும்  புதிய
இலக்கணத்தைப்  படைப்போம்  வா.