இராஜஇராஜேஸ்வரி அவர்கள் வழங்கிய விருது

இராஜஇராஜேஸ்வரி  அவர்கள்  வழங்கிய  விருது

Saturday 3 September 2011

உன் சுவடுகள் ...


நீ ... குழப்பவாதியல்ல
வெற்றி அல்லது
தோல்விக்கான
காரணங்களை மட்டுமே
சிந்திக்கிறாய்.

மூன்றாவதாக
ஒன்றை சிந்தித்து
நீயும் குழம்பி
மற்றவர்களையும் 
குழப்புவதில்லை .

தோல்விக்கான காரணங்களை
கண்டு அதுதந்த
பட்டறிவால்
வெற்றிக்கனியை பறிக்க
வேண்டுமென்கிறாய்.

வெற்றியும்
நிரந்தரமல்ல  என்பது
உன் கோட்பாடு .

அதை
நிலைநிருத்தாவிட்டால்
தோல்வி நம்மைவிழுங்கி
விடும்  என்கிறாய்.

வெற்றிக்கான உன்
இலக்கணமும்
மாறுபட்டது.

முயன்று
மலை முகட்டை
அடையவேண்டும் என்கிறாய்.

பின் வாசல்வழி
வெற்றி இந்த
சமூகத்திற்க்கான
சாக்கடைகளை  மட்டுமே
தோற்று விக்கும்என்கிறாய்.

என்னவனே ...
உன்  சுவடுகள் ...
நாளை நல்லன
விளைவிக்கட்டும்.
 

35 comments:

கிராமத்து காக்கை said...

வெற்றிக்கான உன்
இலக்கணமும்
மாறுபட்டது.
ரசிக்க தகுந்த கவிதை வரிகள்

வலையுகம் said...

@கிராமத்து காக்கை

///வெற்றியும்
நிரந்தரமல்ல என்பது
உன் கோட்பாடு .///

சரியான வரிகள் சகோ

தோலிவியும் நிரந்தரமல்ல
என்பது என் கோட்பாடு

இது எப்பூடி இருக்கு?

Rathnavel Natarajan said...

நல்ல கவிதை.
வாழ்த்துக்கள்.
http://rathnavel-natarajan.blogspot.com/2011/08/blog-post_29.html

கும்மாச்சி said...

"வெற்றிக்கான உன்
இலக்கணமும்
மாறுபட்டது".

மிகவும் சரி, வெற்றிக்கான இலக்கணம் மாறுபட்டதே.

தமிழ் உதயம் said...

நேர்மையான மனிதரை வாழ்க்கை துணையாக்க விளையும் கனவு, கவிதை. நல்ல கவிதை.

மகேந்திரன் said...

//மூன்றாவதாக
ஒன்றை சிந்தித்து
நீயும் குழம்பி
மற்றவர்களையும்
குழப்புவதில்லை//

இதுதான் சரி, ஒன்றிருக்க மற்றொன்றை சிந்திக்கலாம்
மூன்றாவதாக சிந்திப்பது முற்றிலும் இயலாத காரியம்.
அழகு அழகு
உங்கள் கவிதையின் நாயகன் அழகுறச் சிந்தனை சுவடுகள்
பதித்திருக்கிறார்.
கவிதை நன்று சகோதரி.

RAMA RAVI (RAMVI) said...

//பின் வாசல்வழி
வெற்றி இந்த
சமூகத்திற்க்கான
சாக்கடைகளை மட்டுமே
தோற்று விக்கும்என்கிறாய்.//

ஆம்,கிடைக்கும் வெற்றி நேர்மையான செய்கையினால் கிடைத்ததாக இருக்க வேண்டும்.

அற்புதமான கவிதை மாலதி. வாழ்த்துக்கள்.

Yaathoramani.blogspot.com said...

மிகச் சரியாகச் சொல்வதுபோல்
வார்த்தைகளால் கட்டமைக்கப்பட்ட
பல படைப்புகள் குழப்பமேற்படுத்திப்போவதுண்டு
குழப்ப மேற்படுத்துவதுபோல சொற்களால்
கட்டமைக்கப்பட்ட சில படைப்புகள்
நமக்கு தெளிவைத் தந்து போவதுண்டு
தங்கள் படைப்பு இரண்டாவது ரகம்
தரமான பதிவு
தொடர வாழ்த்துக்கள்

Anonymous said...

///பின் வாசல்வழி
வெற்றி இந்த
சமூகத்திற்க்கான
சாக்கடைகளை மட்டுமே
தோற்று விக்கும்என்கிறாய்.// இந்த வரிகள் அசத்தல் ..

MANO நாஞ்சில் மனோ said...

என்னவனே ...
உன் சுவடுகள் ...
நாளை நல்லன
விளைவிக்கட்டும்.//


செம டச்சிங்....சூப்பர் மாலதி......!!!

சுதா SJ said...

அசத்தல் அக்கா

சுதா SJ said...

///பின் வாசல்வழி
வெற்றி இந்த
சமூகத்திற்க்கான
சாக்கடைகளை மட்டுமே
தோற்று விக்கும்என்கிறாய்.//


நிஜமான நெத்தியடி வரிகள். கருத்தாழமிக்க கவிதை

வே.நடனசபாபதி said...

// வெற்றியும் நிரந்தரமல்ல...//
நல்ல சிந்தனை.வாழ்த்துக்கள்

சி.பி.செந்தில்குமார் said...

>>அதை
நிலைநிருத்தாவிட்டால்
தோல்வி நம்மைவிழுங்கி
விடும் என்கிறாய்.


அதை
நிலைநிறுத்தாவிட்டால்
தோல்வி நம்மைவிழுங்கி
விடும் என்கிறாய்.

சி.பி.செந்தில்குமார் said...

>>பின் வாசல்வழி
வெற்றி இந்த
சமூகத்திற்க்கான
சாக்கடைகளை மட்டுமே
தோற்று விக்கும்என்கிறாய்.


பின் வாசல்வழி
வெற்றி இந்த
சமூகத்திற்கான
சாக்கடைகளை மட்டுமே
தோற்று விக்கும்என்கிறாய்.

சி.பி.செந்தில்குமார் said...

கவிதையின் இறுதி வரிகள் நச்..

வை.கோபாலகிருஷ்ணன் said...

அனைவரும் பின்பற்ற வேண்டிய
“உன் சுவடுகள்....”
அருமையோ அருமை.
வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்.
பகிர்வுக்கு நன்றிகள்.vgk

கவி அழகன் said...

பின் வாசல்வழி
வெற்றி இந்த
சமூகத்திற்க்கான
சாக்கடைகளை மட்டுமே
தோற்று விக்கும்என்கிறாய்.

உண்மைதான் சகோதரம்

Manish said...

//வெற்றியும்
நிரந்தரமல்ல என்பது
உன் கோட்பாடு//
Nice line

கூடல் பாலா said...

Very nice

ரிஷபன் said...

சுவடுகள் காட்டுவது நல்ல பாதையைத்தான்.

K.s.s.Rajh said...

அழகான கவிதை சகோதரி

Anonymous said...

அற்புதமான கவிதை சகோதரி
மாலதி...
வாழ்த்துக்கள்...

Unknown said...

நல்ல கவிதை, வாழ்த்துக்கள்.

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

அருமையான கருத்துக்கள்.
நன்றி சகோ.மாலதி.

Unknown said...

அற்புதமான கவிதை வாழ்த்துக்கள் சகோ!

rajamelaiyur said...

Super kavithai

பிரணவன் said...

அருமையான வரிகள். . .அருமையான கருத்து. . .

ஸ்ரீராம். said...

நல்லதொரு கருத்தைச் சொல்லும் கவிதை.

Anonymous said...

சுவடுகள்.....
சுமையுடன்.....
கவிதை நடை அழகு....
வாழ்த்துக்கள் மாலதி....
வருவேன் இன்னும்

காட்டான் said...

பின்வாசல் வழி வெற்றியப்பற்றி கூறுகின்றீர்கள்.. இப்ப இதுதானே கூடுதலாய் இருக்கின்றது...

Anonymous said...

''...பின் வாசல்வழி
வெற்றி இந்த
சமூகத்திற்க்கான
சாக்கடைகளை மட்டுமே
தோற்று விக்கும்என்கிறாய்...''
மாபெரும் உண்மையன்றோ!......இது!
வேதா. இலங்காதிலகம்.

சுசி said...

நல்லா எழுதி இருக்கிங்க மாலதி.

மாலதி said...

அனைவரின் வருகைக்கும் சிறப்பான கருத்து களுக்கும் உளப்பூர்வமான நன்றிகளும் பாராட்டுகளும். நேரமின்மை காரணமாக தனித்தனியே அழைக்க இயலவில்லை .பொறுத்தருள்க.

அ. வேல்முருகன் said...

@மகேந்திரன்மூன்றாவது சிந்தனை சாத்தியம், ஏற்கனவே இருக்கும் இரண்டிலிருந்து அது வேறுபட்டது, அதில் தவறும் இல்லை ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கையில்