இப்போதெல்லாம் காதல்
இலக்கியங்களைக் கற்றதனால்
தோற்றங் கொள்ளுவதில்லை .
இலக்கியங்களைக் கற்றதனால்
தோற்றங் கொள்ளுவதில்லை .
மாறாக மட்டரக
திரைப்படங்களின் வழி
காதல் பெறப்படுகிறது .
மட்டரக காதல்
மாவீரர்களைத் தோற்றங்கொள்ளச்
செய்வதில்லை .
இலக்கியக் காதல்
வீரத்தையும் வாழ்வியலையும்
படம் பிடித்துகாட்டி
பாடமாக விளங்கியது .
திரைப்படங்களுக்கு
அங்கன மெல்லாம்
இருக்க தேவையில்லை .
காதல் வெறும்
இன கவர்ச்சி
மட்டுமே கவர்ச்சியை
காட்டும் காசுபார்க்கும் .
விரைந்தொட்டும் பசைபோல
இன கவர்ச்சி விரைந்துகூடி
விரைந்து பிரியும் .
கற்று கொடுக்காமை
இந்த குமுகத்தின்பிழை
ஊடலும் கூடலும்
இயல்புதான் எனினும்
இப்போதைய காதல்
முறிவை நோக்கியே
முன்னே நகருகிறது .
ஒன்று பட்டு வாழ்வதற்க்கான
சூழலை கண்டறிவோம்
பிணக்குகளை புறந்தள்ளி
ஒற்றுமைக்கான காரணங்களை
கண்டறிந்து கற்ப்போம்
புதிய காதல்பாடம்.