இராஜஇராஜேஸ்வரி அவர்கள் வழங்கிய விருது

இராஜஇராஜேஸ்வரி  அவர்கள்  வழங்கிய  விருது

Saturday 13 August 2011

நீ......... உளியாகும் போதெல்லாம் நான் சிலையாகிறேன் .

 நீ ...
தொட்டுக்காட்டும்
போதெல்லாம்
நான்  கற்றுக்கொள்ளுகிறேன் .


 நீ ..........
கற்றுக்கொடுக்கும்
 போதெல்லாம்
 நான்
செழுமையடைகிறேன் .

 நீ.........
வழிகாட்டும்
போதெல்லாம்
 நான்
தெளிவடைகிறேன் .

நீ.........
உளியாகும்
 போதெல்லாம்
 நான் சிலையாகிறேன் .

 நீ........
மௌனம் ஆகும்
 போதெல்லாம்
நான் தவமேற்கிறேன்.












40 comments:

தமிழ் உதயம் said...

அருமை.

ஆகுலன் said...

கலக்கல் கவிதை.....

இமா க்றிஸ் said...

அழகா இருக்கு கவிதை. தலைப்பும் அருமை.

vidivelli said...

நீ.........
வழிகாட்டும்
போதெல்லாம்
நான்
தெளிவடைகிறேன் .


நல்ல கவிதை
வாழ்த்துக்கள்...

sathishsangkavi.blogspot.com said...

நச்சுன்னு இருக்கு....

Unknown said...

கவிதை அருமை ...தமிழ் மனத்தில் இன்னைது வாக்களித்தேன்

Yaathoramani.blogspot.com said...

சீடனால் பெருமையுறும்
குரு நாதர்களும் இருக்கிறார்கள்
கற்றுக் கொடுப்பதில் உள்ளதைவிட
அதை முழுமையாகப் பெற்றுக் கொள்வதில்தான்
ஆசிரியன் மிகவும் பெருமிதம் கொள்வான்
தரமான பதிவு
தொடர வாழ்த்துக்கள்

ஆமினா said...

அழகான வரிகள்... மனதை கவர்ந்தது

வாழ்த்துக்கள்

மகேந்திரன் said...

அழகு அழகு
கவிதை வரிகள் அழகு

சத்ரியன் said...

சிலையும், கவிதையும் மனம் கவர்கிறது.

கவி அழகன் said...

நீ
கவியாகும் போதெல்லாம்
நான்
தமிழாகின்றேன்

செங்கோவி said...

நீங்கள்..........
கவிதை எழுதும்
போதெல்லாம்
நான் பின்னூட்டுகிறேன்!

நல்ல கவிதை!

இராஜராஜேஸ்வரி said...

சிலையாய் செதுக்கிய அழகிய பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

ஸ்ரீராம். said...

ச்சே....நான் எழுத நினைத்ததை நண்பர் செங்க்கோவி எழுதிவிட்டார்!! சேம் பின்ச்!

கவிதையும் அழகு. படமும் அழகு.

சுதா SJ said...

தலைப்பே ஒரு கவிதை போல் இருக்கு

சுதா SJ said...

அசத்தல் கவிதை அக்கா

பிரணவன் said...

அழகான வரிகள். . .

பத்மநாபன் said...

அற்புதமான வரிகளில் அழகான கவிதை..

Anonymous said...

அருமையான வரிகள் ...

சி.பி.செந்தில்குமார் said...

டைட்டிலே செம

பட்டிகாட்டு தம்பி said...

அருமை.

M.R said...

சுதந்திர தின வாழ்த்துக்கள்

M.R said...

அருமையான கவிதை சகோ

தலைப்பே அருமை அதிலே உள்ளது ஆயிரம் அர்த்தம்

Unknown said...

""தண்ணீர் விட்டோ வளர்த்தோம்சர்வேசா - இப்பயிரை கண்ணீரால் காத்தோம்!'' -என்ற பாரதியின் வரிகளுடன்..

அனைவருக்கும் எமது இந்திய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்..

Unknown said...

இந்த பதிவுக்கு வாக்குகளும், வாழ்த்துக்களும்..

வை.கோபாலகிருஷ்ணன் said...

சிலையாய்ச் செதுக்கிய சிறந்த பதிவு.
உளியாய் உங்கள் வார்த்தைகள்.
பாராட்டுக்கள்.

vetha (kovaikkavi) said...

அருமை...அருமை...நல்ல வரிகள் சகோதரி. வாழ்த்துகள்..தொடருங்கள்...
வேதா. இலங்காதிலகம்.
http://www.kovaikkavi.wordpress.com

G.M Balasubramaniam said...

நீங்கள் குறிப்பிடும் அந்த “ நீ “இதைப் படித்தால் பெருமிதம் கொள்வார். வாழ்த்துக்கள்.

Anonymous said...

அழகான வரிகள்... பாராட்டுக்கள்...

தமிழ்த்தோட்டம் said...

கலக்கீட்டீங்க

முனைவர் இரா.குணசீலன் said...

தங்கள் கவிதையைப் படிக்கும்போதெல்லம் நான் ரசிகனாகிறேன்.

K.s.s.Rajh said...

//நீ.........
உளியாகும்
போதெல்லாம்
நான் சிலையாகிறேன்//

அருமையான கவிதை

வலையுகம் said...

என்ன சொல்ல வர்றீங்க புரியவில்லை
ஒ விளங்காத கவிதை தான்
சிறந்த கவிதை அப்படித்தனே!

வே.நடனசபாபதி said...

அருமையான கவிதை! கருத்தும்,சொல்லாட்சியும் அழகாக உள்ளன.
வாழ்த்துக்கள்!!

தமிழ்வாசி பிரகாஷ் said...

கவிதை சூப்பரு

சென்னை பித்தன் said...

அழகு தமிழ் எனும் உளியெடுத்துச் செதுக்கப்பட்ட அருமைக் கவிதை!

Unknown said...

நீ அர்த்தத்தோடு புன்னகைக்கும் போதெல்லாம் நான் நிறைவாகிறேன்..

RAMA RAVI (RAMVI) said...

//நீ.........
உளியாகும்
போதெல்லாம்
நான் சிலையாகிறேன் .//
அருமை.

மாலதி said...

வருகைக்கும் கருத்து களுக்கும் உளம் கனிந்த பாராட்டுகளும் நன்றிகளும்

ரிஷபன் said...

தொடர்புபடுத்திய கவிதை அழகு.